யாழில் தொலைபேசிகளைத் திருடிய மூவர் கைது! 15 லட்சம் பெறுமதியான 45 தொலைபேசிகள் மீட்பு (படம்)
யாழ்ப்பாணத்தில் கடந்த மூன்று மாதங்களாக தொலைபேசிகளை திருடிய கும்பலைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாவற்குழி மற்றும் அரியாலையைச் சேர்ந்த 23,24 மற்றும் 27 வயதுடைய சந்தேக நபர்களே யாழ்ப்பாணம் தலைமையக காவல்துறை நிலைய குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து சுமார் 3 லட்சம் ரூபாய் பெறுமதியான தொலைபேசிகள் உட்பட 45 தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றின் மொத்த பெறுமதி சுமார் 15 லட்சம் என்றும் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்களின் வாக்குமூலம்
போதைப்பொருளுக்கு அடிமையாகியதால் பேருந்துகளில் ஏறி பயணிகளிடம் தொலைபேசியைத் திருடி தப்பிப்பதாக சந்தேக நபர்கள் வாக்குமூலம் வழங்கியதாகவும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இடம்பெற்ற தொலைபேசித் திருட்டுகளிலும் இவர்களுக்கு தொடர்புண்டு என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும் தொலைபேசி திருட்டு போயிருந்தால் உரியவர்கள் யாழ்ப்பாணம் தலைமையக காவல்துறை நிலையத்தில் வந்து அடையாளம் காட்ட முடியும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.