கொலைக் குற்றவாளிகளுக்கு தண்டனை! அநுர அரசிடம் சிறிநேசன் எம்.பி கோரிக்கை

Anura Kumara Dissanayaka Law and Order ITAK National People's Power - NPP Gnanamuththu Srineshan
By Sathangani Dec 24, 2024 11:11 AM GMT
Report

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தலைமையிலான அரசாங்கம் சட்டவாட்சியைப் பலப்படுத்தி பாரிய குற்றங்களைச் செய்த குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளருமான ஞானமுத்து சிறிநேசன் (Gnanamuththu Srinesan) தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தியிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது, ”இந்நாட்டில் நடைபெற்ற யுத்த காலத்தின் போது பல தலைவர்கள், புத்தியாளர்கள், கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள், போராளிகள், பொதுமக்கள் பலர் கடத்தப்பட்டும், கொல்லப்பட்டும் உள்ளனர்.

யாழில் நிறுவப்படவுள்ள கடவுச்சீட்டு அலுவலகம் : ஆளுங்கட்சி எம்.பி உறுதி

யாழில் நிறுவப்படவுள்ள கடவுச்சீட்டு அலுவலகம் : ஆளுங்கட்சி எம்.பி உறுதி

முன்னாள் எம்.பிக்கள் கொலை

அதனைச் செய்தவர்கள் தண்டிக்கப்படாமல் உள்ளதோடு மட்டுமல்லாமல், கௌரவர்களாக உலாவி வருகின்றனர். அவர்களில் பலர் அதிகார சக்திகளால் பாதுகாக்கப்பட்டும் வருகின்றனர். சட்டவாட்சி வலுப்பெற்றால், இத்தகைய குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது உறுதியாகும்.

கொலைக் குற்றவாளிகளுக்கு தண்டனை! அநுர அரசிடம் சிறிநேசன் எம்.பி கோரிக்கை | Criminals Must Be Punished Under Anura S Rule

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான யோசப் பரராசசிங்கம், ரவிராஜ், சந்திரநேரு, சிவநேசன் ஆகிய தலைவர்கள் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார்கள்.

மேலும், கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தரும் பேராசிரியருமான ரவீந்திரநாத் தலைநகரில் கடத்தப்பட்டுப் பின்னர் கொல்லப்பட்டதாக அறிய முடிகின்றது. சிரேஷ்ட விரிவுரையாளர் தம்பையா அவரது வீட்டில் இருக்கும் போது பகலில் சுடப்பட்டுக் கொல்லப்பட்டார்.

மூடப்படும் நிலைக்கு வந்துள்ள யாழ். வேலணை வைத்தியசாலை! அரசின் அசமந்தம்

மூடப்படும் நிலைக்கு வந்துள்ள யாழ். வேலணை வைத்தியசாலை! அரசின் அசமந்தம்

ஊடகவியலாளர்கள் படுகொலை

பிறேமினி தனுஸ்கோடி, சதிஸ்கரன் உட்பட தமிழர் புனர்வாழ்வுக் கழக உத்தியோகத்தர்கள் சிலர் கடத்தப்பட்டு பொலன்னறுவை தீவுச்சேனையில் கொல்லப்பட்டதாக அறியப்படுகிது.

கொலைக் குற்றவாளிகளுக்கு தண்டனை! அநுர அரசிடம் சிறிநேசன் எம்.பி கோரிக்கை | Criminals Must Be Punished Under Anura S Rule

மேலும் திருமலை விக்கினேஸ்வரன் சுட்டுக்கொல்லப்பட்டார். சிவராம், நடேசன், லசந்த விக்கிரமதுங்க, எக்னலிகொட, நிமலராஜன் போன்ற 40 இற்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் 2006 தொடக்கம் 2015 இற்கு இடைப்பட்ட காலத்தில் கடத்தப்பட்டும், கொல்லப்பட்டும் உள்ளனர்.

தேற்றாத்தீவில் பொறியியலாளர் திருமதி லோகேஸ்வரன் என்ற பெண்மணியான ஒரு பச்சைக் குழந்தையின் தாய் பெற்றோரின் கண்களுக்கு முன்னால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

கோட்டாபயவின் இயற்கை விவசாய மோசடி : அநுர அரசின் அதிரடி நடவடிக்கை

கோட்டாபயவின் இயற்கை விவசாய மோசடி : அநுர அரசின் அதிரடி நடவடிக்கை

நூற்றுக்கணக்கான பக்தர்கள் கொலை

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் பல நூற்றுக்கணக்கான அப்பாவி பக்தர்கள் கொல்லப்பட்டனர். ஆனால் இச்சம்பவங்களுடன் தொடர்பான குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை.

கொலைக் குற்றவாளிகளுக்கு தண்டனை! அநுர அரசிடம் சிறிநேசன் எம்.பி கோரிக்கை | Criminals Must Be Punished Under Anura S Rule

இதனால் நாட்டின் மனிதவுரிமைகள் சட்டவாட்சி ஜனநாயகம் போன்ற விடயங்கள் கேவலப்படுத்தப்பட்டன. இவற்றுக்கெல்லாம் உரிய பரிகாரம் தேவையென்றால், சட்டவாட்சி பலப்படுத்தப்பட்டு குற்றவாளிகள் சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டு முறையாக விசாரிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும்.

இதன் மூலம் நாட்டின் கௌரவத்தை மீண்டும். கட்டியெழுப்ப முடியும். இதனை ஜனாதிபதியும், தேசிய மக்கள் சக்தியும் செய்தால், வரவேற்புக் கிடைக்கும். இல்லையேல் முந்திய அரசாங்கங்கள் போன்றதாக இந்த அரசாங்கமும் அமைந்து விடும்.” என குறிப்பிட்டுள்ளார்.

கச்சத்தீவை இந்தியாவிடம் ஒப்படைக்கும் பிரேரணை குறித்து வெளியான தகவல்

கச்சத்தீவை இந்தியாவிடம் ஒப்படைக்கும் பிரேரணை குறித்து வெளியான தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Reggio Emilia, Italy, Hayes, United Kingdom

10 May, 2023
மரண அறிவித்தல்

இணுவில் மேற்கு, பிரான்ஸ், France

12 Apr, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், கோப்பாய், Katunayake, Toronto, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, Brampton, Canada

17 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, தெஹிவளை

15 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பேர்லின், Germany, Markham, Canada

28 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், திருச்சி, India, Toronto, Canada

17 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பரந்தன், துன்னாலை, திக்கம்

16 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி மேற்கு

13 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epsom, United Kingdom

16 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Spiez, Switzerland

17 Apr, 2000
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Birmingham, United Kingdom

07 Apr, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

06 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Paris, France

11 Apr, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

15 Apr, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், Greenford, United Kingdom

15 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, Herne, Germany, Datteln, Germany

12 Apr, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Ottawa, Canada

25 Apr, 2024