குறுக்கே பாய்ந்த மாடு! கோர விபத்தில் சிக்கி இருவர் பலி
Death
Accident
SriLanka
Ingiriya
By Chanakyan
இங்கிரிய, பாதுக்க வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று அதிகாலையில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
வீதியின் குறுக்காக பயணித்த மாடு ஒன்றுடன் முச்சக்கரவண்டி ஒன்று மோதி கவிழ்ந்து, பின்னர் டிபர் ஒன்றுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்தில் முச்சக்கரவண்டியின் ஓட்டுனர் உட்பட அதில் பயணித்த ஒருவரும் உயிரிழந்துள்ளார்.
பலங்கொட பகுதியை சேர்ந்த 35 மற்றும் 46 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் டிபர் வாகனத்தின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் இங்கிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரபாகரன் புத்தகங்களைத் தந்தாரா? இராணுவச் சிப்பாய் கேட்ட கேள்வி.. 14 மணி நேரம் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி