இலங்கையை வந்தடைந்த சுற்றுலா சொகுசு பயணக் கப்பல்
World Tourism Day
Sri Lanka Tourism
Tourism
Ship
By Thulsi
அதிசொகுசு சுற்றுலாப் பயண கப்பலான டி.பீ. லுமினியா சுற்றுலாப் பயணிகளுடன் இலங்கையை வந்தடைந்தது.
அதன்படி, 550 சுற்றுலாப் பயணிகளுடன் குறித்த கப்பல் இன்று (23.02.2026) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது.
அவுஸ்திரேலியா, இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இந்தக் கப்பலில் பிரவேசித்தனர்.
சுற்றுலாப் பயணிகள்
திருகோணமலையை வந்தடைந்த அவர்கள் திருகோணமலை, சீகிரியா, ஹபரன போன்ற இடங்களை பார்வையிடவுள்ளனர்.

இந்தக் கப்பலில் 497 பணிக்குழாமினரும் அடங்குகின்றனர்.
கிழக்கு மாகாணத்தின் சுற்றுலா மையமான திருகோணமலைக்கு இந்த சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளமையானது சுற்றுலாத் துறைக்கு பெரும் உந்துசக்தியாக அமையும் என சுற்றுலாத்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி