15 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடி: சிஎஸ்கே அணிக்கு எதிராக ராஜஸ்தான் வெற்றி
ஐபிஎல் தொடரின் தனது முதல் போட்டியிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதிரடியான தொடக்கத்தைப் பதிவு செய்துள்ளது.
15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் அரைசதம் இந்த வெற்றியின் முக்கிய அம்சமாக அமைந்தது.
குறித்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது.
துடுப்பாட்ட வீரர்
ஆரம்பத்திலேயே ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் நந்ரே பர்கர் ஆகியோரின் வேகத்தில் சென்னை அணி நிலைகுலைந்தது.
ஒரு கட்டத்தில் 84 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தவித்த சென்னை அணியை ஜேமி ஓவர்டன் அதிரடியாக விளையாடி 43 ஓட்டங்கள் எடுத்து அணியின் மொத்த ஓட்டங்களை 127 வரை கொண்டு சென்றார்.

ராஜஸ்தான் அணி சார்பாக 17 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த அணிக்குத் திரும்பிய ரவீந்திர ஜடேஜா ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
128 ஓட்டங்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர் வைபவ் சூர்யவன்ஷி அனல் பறக்கும் தொடக்கத்தை அளித்தார்.
ஐபிஎல் வரலாறு
வெறும் 15 பந்துகளில் அரைசதம் கடந்து ஐபிஎல் வரலாற்றில் மூன்றாவது அதிவேக அரைசதத்தைப் பதிவு செய்தார்.
இதன் மூலம் சுரேஷ் ரெய்னா, ட்ரெவிஸ் ஹெட் ஆகியோரின் சாதனைகளை அவர் முறியடித்தார்.

சூர்யவன்ஷி 52 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த போதிலும் ராஜஸ்தான் அணி 12.1 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டியது.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் 38 ஓட்டங்களுடனும் ரியான் பராக் 14 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்திலிருந்து அணியை வெற்றிப்பாதைக்கும் அழைத்துச் சென்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 19 மணி நேரம் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
3 நாட்கள் முன்