தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்படுவது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள தகவல்
Corona
Curfew
People
SriLanka
By Chanakyan
ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டமானது மேலும் நீடிக்காமல் நீக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஒக்டோபர் 1ஆம் திகதியின் பின்னர் நீக்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் தொடர்ந்து நீடித்து வைத்திருக்கும் எண்ணம் இல்லை எனவும் மேலும் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தலைமையில் நேற்றையதினம் நடைபெற்ற கொரோனா தடுப்பு செயலணி கூட்டத்தின் போது ஒக்டோபர் 1ஆம திகதி வரையில் ஊரடங்குச் சட்டம் நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.