இணையப் பாதுகாப்பு சட்ட வரைபு : தமிழ் முஸ்லிம் கட்சிகள் எதிராகக் குரல் கொடுக்கத் தயங்குவது ஏன்...!

Ranil Wickremesinghe Sarath Weerasekara Sri Lanka Journalists In Sri Lanka
By Vanan Oct 03, 2023 04:44 AM GMT
Report

இணையப் பாதுகாப்பு சட்டம் எனப்படும் நிகழ்நிலைக் காப்புச் சட்ட வரைபுக்கு எதிராகத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் மலையகத் தமிழ்க் கட்சிகளும் மற்றும் முஸ்லிம் கட்சிகளும் குரல் கொடுக்காமல் அமைதிகாப்பதாகத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் சார்பில் ஊடகத்துறை விரிவுரையாளரும் பத்திரிகையாளருமான அமிர்தநாயகம் நிக்ஸன் குற்றம் சுமத்தியுள்ளார்.

'அரசாங்கத்தின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகக் குரல் கொடுப்போம்” என்ற தொனிப் பொருளில் கொழும்பில் உள்ள இதழியல் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளிக்கும்போதே நிக்ஸன் இவ்வாறு கூறினார்.

நிறைவேற்று அதிகார அதிகரிப்பு

நிறைவேற்று அதிகாரமுள்ள அதிபர் ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் காலம் காலமாக முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கான நகல் வரைபும் இணையத்தளச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தவுள்ள நிகழ்நிலைக்காப்புச் சட்ட நகல் வரைபும் நிறைவேற்று அதிகாரத்தை மேலும் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இணையப் பாதுகாப்பு சட்ட வரைபு : தமிழ் முஸ்லிம் கட்சிகள் எதிராகக் குரல் கொடுக்கத் தயங்குவது ஏன்...! | Cybersecurity Actl Sri Lanka Law In Sri Lanka

வடக்கு கிழக்கில் சட்டத்தரணிகள் எதிர்ப்பு போராட்டத்தில்..

வடக்கு கிழக்கில் சட்டத்தரணிகள் எதிர்ப்பு போராட்டத்தில்..

முல்லைத்தீவு நீதிபதிக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பாக இதுவரை விசாரணைகள் ஆரம்பிக்கப்படவில்லை. வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகப் பிரதேசங்களில் இன்றுவரை இராணுவப் புலனாய்வாளர்களின் கண்காணிப்பும் அச்சுறுத்தல்களும் தொடருகின்றன.

குறிப்பாகத் தமிழ் ஊடகவியலாளர்களும் தமிழ் சமூகவலைத்தளச் செயற்பாட்டாளர்களும் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர்.

முப்பது வருடப் போர்க் காலத்திலும் 2009 மே மாதத்தின் பின்னரான பதின் நான்கு வருடங்களிலும் தமிழ் ஊடகத்துறை அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி வரும் நிலையில் இந்தப் புதிய சட்டவரைபுகள் தொடர்பாகக் குரல் கொடுக்க வேண்டிய அவசியம் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு உண்டு. ஆனால் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மொளனமாக இருப்பதாக நிக்ஸன் கவலை வெளியிட்டார்.

இந்தப் புதிய சட்டங்களுக்கான வரைபுகள் அரச வர்த்தமானி இதழில் வெளியிடப்பட்டுள்ளமை ஊடகச் செயற்பாட்டாளர்கள் மத்தியில் அச்சத்தை தோற்றுவித்துள்ளது எனவும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தையும் நிகழ் நிலைக்காப்புச் சட்டத்தையும் அரசாங்கம் உடனடியாக வாபஸ் பெற வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

அதேவேளை, ஊழல்மோடி, அதிகாரத் துஸ்பிரயோகம் தொடர்பாக உரிய விசாரணைகள் நடத்தப்பட்டுச் சம்பத்தப்பட்ட அமைச்சர்கள், அரசியல்வாதிகள் கைது செய்யப்படவில்லை. ஊழல்மோசடிகள்; அரச மட்டத்தில் இடம்பெறுகின்றன.

சீனக் கப்பல் விஜயம்: அமெரிக்காவிற்கு கடும் தொனியில் எச்சரிக்கை விடுத்த இலங்கை

சீனக் கப்பல் விஜயம்: அமெரிக்காவிற்கு கடும் தொனியில் எச்சரிக்கை விடுத்த இலங்கை

ஊடகங்களை கட்டுப்படுத்த முனைவது ஏன்?

இதேவேளை, இது தொடர்பான உண்மைகளை வெளிப்படுத்தி வரும் சமூகச் செயற்பாட்டாளர்கள், சமூகவலைத்தளங்களைக் கட்டுப்படுத்த அதிபர் ரணில் விக்ரமசிங்க ஏன் நடவடிக்கை எடுக்கிறார் என்று தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் ஜெகான் பெரேரா கேள்வி எழுப்பினார்.

இணையப் பாதுகாப்பு சட்ட வரைபு : தமிழ் முஸ்லிம் கட்சிகள் எதிராகக் குரல் கொடுக்கத் தயங்குவது ஏன்...! | Cybersecurity Actl Sri Lanka Law In Sri Lanka

முல்லைத்தீவு நீதிபதிக்கு அச்சுறுத்தல் விடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரகேசர இதுவரை விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை. பௌத்த தேரர்கள் வடக்குக் கிழக்கில் நீதித்துறையை அச்சுறுத்தி வருகின்றனர்.

ஆனால் இவை பற்றி அரசாங்கம் எந்த ஒரு விசாரணைகளையும் நடத்த முன்வராத நிலையில், ஊடகங்களையும் சமூகவலைத்தங்களையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பிய ஆசிரியர் சங்கச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின், இதன் பின்னணியில் ஆபத்தான அரசியல் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

ஊடக அமைப்புகளும் சிவில் சமூக அமைப்புகளும் மற்றும் சமூகவலைத்தள செயற்பாட்டாளர்களும் இணைந்து இந்தச் செய்தியாளர் மாநாட்டை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

இந்தியாவிற்கு அடுத்த பேரிடி..! சீனாவின் கைவசமானது முக்கிய தளம்

இந்தியாவிற்கு அடுத்த பேரிடி..! சீனாவின் கைவசமானது முக்கிய தளம்

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Scarborough, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, நாவற்குழி, Moratuwa

01 Oct, 2023
மரண அறிவித்தல்

Balangoda, நல்லூர், கொழும்பு, London, United Kingdom

15 Sep, 2024
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Zürich, Switzerland

18 Sep, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

01 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, செங்கலடி, Harrow, United Kingdom

13 Sep, 2024
மரண அறிவித்தல்

நாவலடி ஊரிக்காடு, Munich, Germany

12 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கேகாலை, யாழ்ப்பாணம், Herning, Denmark, Toronto, Canada

19 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, நுணாவில் மேற்கு

16 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

ஊரெழு, நீர்வேலி

17 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தரோடை, Eastham, United Kingdom

13 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, நியூஸ்லாந்து, New Zealand

18 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், பரந்தன் குமரபுரம், திருச்சி, India

01 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Markham, Canada

19 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Markham, Canada, கோண்டாவில்

15 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மானிப்பாய், தொல்புரம், London, United Kingdom

12 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

08 Sep, 2024