இலங்கையை நெருங்கும் புயல்! நாட்டுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையின் தெற்கு மற்றும் தென்மேற்கு கடல் பகுதிகளில் பலத்த மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.
நாட்டின் தெற்குப் பகுதியிலும் மாலத்தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதியிலும் தற்போது பலத்த மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக காற்று வரைபடம் மற்றும், வானிலை முன்னறிவிப்பு அறிக்கையில்(windy) சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த மழை வீழ்ச்சி நாட்டின் மேற்கு, சப்ரகமுவ மற்றும் தெற்கு மாகாணங்களிலும், மத்திய மாகாணத்தின் பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்த சில நாட்கள்
அத்தோடு அடுத்த சில நாட்களில் மழை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தெற்கு மற்றும் தென்மேற்கு மாகாணங்களில் (மேற்கு, சப்ரகமுவ, தெற்கு, வடமேற்கு) பலத்த மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
வடமத்திய, மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் பிற்பகல் நாளை பி.ப 2.00 மணிக்குப் பிறகு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
