நீண்ட வரிசையில் மக்கள்- எரிவாயு பெற்றுக் கொள்வதில் அமைதியின்மை!(படங்கள்)
people
cylinder
By Thavathevan
எரிவாயுவை கொள்வனவு செய்யக் காத்திருந்த சிலருக்கு எரிவாயு கிடைக்காமையால் அமைதியின்மையில் ஈடுப்பட்டுள்ளனர்.
மலையகத்தில் பிரதான நகரங்களில் காணப்படும் லிட்ரோ எரிவாயு விநியோக நிலையங்களுக்கு ஏழு நாட்களுக்குப் பிறகு இன்று லிட்ரோ எரிவாயு விநியோகம் நடைபெற்றுள்ளது.
பொதுமக்கள் அதனைப் பெற்றுக் கொள்வதற்கு அதிகாலையில் இருந்தே நீண்ட வரிசையில் நின்று எரிவாயுவை பெற்று சென்றனர். ஆயினும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கோரிக்கைக்கு ஏற்ப லிட்ரோ எரிவாயுவை பெற்றுக் கொள்ள முடியவில்லை.
எனினும் எரிவாயு நிறுவனத்தால் இன்று வழங்கப்பட்ட நூறிற்கும் குறைவான சிலிண்டர்களே கடைகளுக்கு வழங்கப்பட்டதாகவும் அவற்றை பலருக்கு வழங்க முடியாது போனதாக விற்பனையாளர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 3 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்