ஈரானின் அணு ஆயுதம் ஏற்றுக்கொள்ள முடியாத அச்சுறுத்தல் : ட்ரம்ப்பின் ஐ.நா தூதர் தகவல்
ஈரான் அணு ஆயுதத்தை வைத்திருப்பது என்பது அமெரிக்காவிற்கும் உலகிற்கும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு அச்சுறுத்தல் என்று டொனால்ட் ட்ரம்ப்பின் ஐ.நா தூதரான மைக் வோல்ட்ஸ் (Mike Waltz) தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானுக்கு எதிரான விவகாரத்தில் அமெரிக்கா இவ்வளவு வலிமையான நிலையில் இருந்ததில்லை என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கு அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று பாருங்கள்.
உளவுத் தகவல்களைப் பகிர்ந்த ரஷ்யா
ஈரானின் செயல்பாடுகளையும், அவர்கள் எல்லா திசைகளிலும் தாக்குதல் நடத்துவதையும் நாம் பார்த்திருக்கிறோம். ஒருவேளை அவர்கள் அணு ஆயுதப் பாதுகாப்பின் கீழ் இதைச் செய்திருந்தால் நிலைமை எப்படி இருந்திருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்.

ஈரானின் போர் முயற்சிகளுக்கு உதவும் வகையில் ரஷ்யா உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறது என்ற கருத்துகள் குறித்து நாம் கருத்து தெரிவிக்கப் போவதில்லை.
ஆனால், ஒருவேளை அப்படித் தகவல் பகிரப்பட்டிருந்தால், அது நிச்சயமாக எந்தப் பலனையும் அளிக்கவில்லை” என்று மைக் வோல்ட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |