எல்.பி.எல் தொடருக்கான திகதி அறிவிப்பு
Cricket
Sri Lanka Cricket
Sri Lanka
By Raghav
2025 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் (LPL) இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் நடைபெறும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை சிறிலங்கா கிரிக்கெட் இன்று (01.08.2025) அறிவித்துள்ளது.
லங்கா பிரீமியர் லீக்
அதன்படி நவம்பர் மாதம் 27 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி வரை நடைபெறும் என்று சிறிலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த ஆண்டு போட்டிகள் கொழும்பு, பல்லேகலை மற்றும் தம்புள்ளை மைதானங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
வரவிருக்கும் 2026 டி20 உலகக் கிண்ண ஒத்திகையாக இந்தக் காலகட்டத்தில் போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்