ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும்! ட்ரம்ப் மீண்டும் மிரட்டல்
புதிய அணு ஒப்பந்தத்திற்காக பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையில், மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்க படைகள் பல நாட்கள் நீடிக்கும் விமான ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
ட்ரம்பின் மிரட்டல்
இந்த பயிற்சிகள், அவசர சூழலில் படையினரை விரைவாக அனுப்புதல் மற்றும் குறைந்த வளங்களுடன் தாக்குதல் நடவடிக்கைகளை நடத்தும் திறனை மேம்படுத்துவதற்காக நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

Image Credit: BBC
ஈரானில் நடைபெற்ற அரசு எதிர்ப்பு போராட்டங்களை கடுமையாக அடக்கியதையடுத்து, கடந்த வாரம் விடுத்த மிரட்டலை ட்ரம்ப் மீண்டும் நினைவூட்டியுள்ளார்.
பதற்றம் அதிகரிப்பு
இந்த நிலையில், நியாயமான மற்றும் சமமான அணு ஒப்பந்தத்திற்காக ஈரான் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்றும், இல்லையெனில் கடந்த ஆண்டு நடந்த தாக்குதலை விட கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

“நேரம் விரைவாக முடிந்து வருகிறது” என்று ட்ரம்ப் Truth Social தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனால், அமெரிக்கா–ஈரான் இடையேயான பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |