யாழ்ப்பாணத்தில் பட்டப்பகலில் இடம்பெற்ற துணிகர திருட்டு
யாழ் - ஊர்காவல்துறை காவல்துறை பிரிவிற்குட்பட்ட காரைநகர் - களபூமியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 3 1/2 பவுண் தங்கநகைகள் மற்றும் 25 ஆயிரம் ரூபா பணம் என்பன களவாடப்பட்டுள்ளது.
இன்றையதினம் (19) இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
பட்டப்பகலில் திருட்டு
வீட்டில் தனியாக வசித்துவந்து 72 வயதுடைய மூதாட்டி சமுர்த்திக் கொடுப்பனவை பெறுவதற்காக இன்றையதினம் பிரதேச செயலகத்திற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் வீட்டிற்குச் சென்ற திருடர்கள் கதவினை உடைத்து உள்ளே சென்று அலுமாரிக்குள் இருந்த உள் கதவு திறப்பினை எடுத்து கதவினை திறந்து இவ்வாறு நகைகளையும் பணத்தையும் களவாடிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து ஊர்காவற்துறை காவல் நிலையத்தின் கண்காணிப்பின் கீழ் இயங்கும் களபூமி காவலரணில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம் நாள் திருவிழா

