யாழ். அரியாலை பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்
யாழில் (Jaffna) வயலுக்கு வரம்பு கட்டச் சென்ற நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் கடந்த (27) ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
கண்டி வீதி, அரியாலை பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி ராஜபாரதி (வயது 60) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணை
இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் அரியாலை - நாவலடி பகுதியில் கமம் செய்து வந்தார். அந்தவகையில் வரம்பு கட்டுவதற்காக அங்கு சென்றுள்ளார்.
பின்னர் இரவு வரை அவர் திரும்பி வராத நிலையில் உறவினர்கள் அவரைத் தேடிச்சென்றனர். இதன்போது அவர் அங்குள்ள ஆலயம் ஒன்றிற்கு அருகில் உள்ள வெளி ஒன்றில் சடலமாக காணப்பட்டார்.
இந்நிலையில் அவரது சடலமானது மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
