யாழில் குளத்தில் இருந்து முதியவரின் சடலம் மீட்பு!
Sri Lanka Police
Jaffna
Sri Lanka
By Raghav
யாழில் (Jaffna) குளத்திலிருந்து உடலில் கயிறு கட்டிய நிலையில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலமானது இன்றைய தினம் (02.02.2025) மீட்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்.வடமராட்சி கிழக்கு - செம்பியன்பற்று தெற்கு பகுதியில் உள்ள குளத்திலிருந்து உடலில் கயிறு கட்டிய நிலையில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. '
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த முதியவர் வேதனை தாங்க முடியாமலே தனது உயிரை இவ்வாறு மாய்த்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் மருதங்கேணி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்