பிறந்த நாளுக்கு வாங்கிய கேக்கில் இறந்து கிடந்த பல்லியால் அதிர்ச்சி
பிறந்தநாளுக்கு வாங்கிய ஐசிங் கேக்கில் இறந்த நிலையில் பல்லி ஒன்று கிடந்தமை அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன் 2 சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் மஸ்கெலியாவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்று முன்தினம் (26) பிறந்தநாள் கொண்டாடுவதற்காக, மஸ்கெலியா நகரத்தில் உள்ள வெதுப்பகம் ஒன்றிலிருந்து ஐசிங் கேக் ஒன்று வாங்கப்பட்டுள்ளது.
இரண்டு சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
பிறந்தநாள் நிகழ்வில் கேக் வெட்டப்பட்டு, அனைவருக்கும் பரிமாறப்பட்டது.அதன் பின்னர் மீதமிருந்த கேக்கை பார்த்தபோது, அதில் இறந்த நிலையில் பல்லி ஒன்று கிடந்துள்ளது.

இதனால், குறித்த கேக்கை சாப்பிட்ட 5 வயது பெண் பிள்ளையும், 3 வயதான ஆண் குழந்தையும் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு அவதானிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
பொது சுகாதார பரிசோதகர்கள் எடுக்கவுள்ள நடவடிக்கை
இது குறித்து மஸ்கெலியா சுகாதார அத்தியட்சகருக்கு முறைப்பாடு செய்ததை தொடர்ந்து, பொது சுகாதார அதிகாரிகள் உரிய வெதுப்பக உரிமையாளரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 4 நாட்கள் முன்