உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு! வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு
2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் ஈடுபடவுள்ளவர்களுக்கான விண்ணப்ப இறுதித் திகதி நீடிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கத் தவறிய பரீட்சகர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதன்படி, இணையவழி மூலமாக விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் எதிர்வரும் 2026 ஜூன் 26 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ இணையத்தளம்
விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை https://onlineexams.gov.lk/eic என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் ஊடாக புதிய இறுதித் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க முடியும்.

விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் போது ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறுகளை எதிர்கொள்ளும் விண்ணப்பதாரர்கள், உதவிக்காக பரீட்சைத் திணைக்களத்தின் இணையவழிப் பிரிவை (Online Branch) 011-3661122 அல்லது 011-3671568 ஆகிய இலக்கங்களினூடாகவும், பாடசாலைப் பரீட்சைகள் மதிப்பீட்டுப் பிரிவை (School Examinations Evaluation Branch) 011-2785231 அல்லது 011-2785681 ஆகிய இலக்கங்களினூடாகவும் தொடர்புகொண்டு உதவியைப் பெற முடியும் என பரீட்சைத் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |