தொடர் மர்மத்தில் வைத்திய நிபுணரின் மரணம்! காவல்துறை விசாரணை தீவிரம்
பதுளை போதனா வைத்தியசாலையில் பணியாற்றிய மயக்கவியல் நிபுணர் உயிரிழந்த சம்பவம் குறித்து, அதே வைத்தியசாலையை சேர்ந்த பதுளை போதனா வைத்தியசாலையின் வைத்தியர் பாலித ராஜபக்ச கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
“பிரபாத் அன்றைய தினம் காலை சுமார் 10.00 மணியளவில் ஒரு அறுவைச் சிகிச்சையையும் மேற்கொண்டார் என்றும், அதன் பின்னர் அவர் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை எனவும், நடந்த சம்பவத்தை எங்களால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லையெனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
மேலும், உயிரிழந்த வைத்தியர் தனது கடமையை முறையாக நிறைவேற்றிய ஒருவராக இருந்தார் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கொள்ளப்பட்ட விசாரணை
வைத்தியர் பிரபாத் அனுராத தயாரத்ன, நேற்று முன்தினம் (23) முதல் காணாமல் போயிருந்த நிலையில், மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் அவரது சடலம் நேற்று (24) மஹியங்கனை, மாபாகட 17ஆம் கட்டைப் பகுதியில் காவல்துறையால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மஹியங்கனை, மாபாகட 17ஆம் கட்டைப் பகுதியில் வியானா கால்வாய்க்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட மோட்டார் வாகனம் தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அந்த வாகனம் குறித்த வைத்தியருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது
. இதனையடுத்து மஹியங்கனை காவல்துறையினர், இராணுவத்தினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது, வாகனம் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு அருகிலுள்ள வனப்பகுதியில் வைத்தியரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மர்மமான முறையில் உயிரிழந்திருந்த வைத்தியரின் சடலத்திற்கு அருகில் 3 வகையான மருந்து மாத்திரைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால், வைத்தியர் உயிரை மாய்த்துக்கொண்டிருக்களாம் என அவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
தொடர் மன அழுத்தம்
கொழும்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்டம் பெற்ற வைத்திய நிபுணர் பிரபாத் அனுராத , இரு பிள்ளைகளின் தந்தையாவார்.

மேலும், அவர் நீண்ட காலமாக மன அழுத்தத்திற்காக மருந்துகளை உட்கொண்டு வந்ததாகவும் காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வைத்தியர் நேற்று முன்தினம் காலை முதல் காணாமல் போயுள்ளதாக காவல்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவரைத் தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அந்தத் தேடுதலின்போது, நேற்று முன்தினம் இரவே அவரது மோட்டார் வாகனம் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. பின்னர் நேற்று மேற்கொள்ளப்பட்ட தேடுதலில், வாகனம் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திலிருந்து சுமார் 800 மீற்றர் தொலைவில், ஒரு கல்லின் மீது வைத்தியரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |