ட்ரம்பின் நாடுகடத்தல் நடவடிக்கை: பயத்தில் தீயில் கருகிய புலம்பெயர் குடும்பம்
அமெரிக்காவில் (United States) புலம்பெயர் குடும்பம் ஒன்று குடியிருந்த வீட்டிற்கு தீ வைத்துக்கொண்டு உயிர் மாய்த்த சம்பவம் உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்பின் (Donald Trump) நடவடிக்கைகளுக்கு பயந்து அவர்கள் இந்நடவடிக்கை எடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், இதில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள், தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் அண்டை வீட்டார் மீட்புப் பணிகளில் இருந்துள்ளனர்.
வளர்ப்பு நாய்
சுமார் 600,000 டொலர் மதிப்பிலான அந்த குடியிருப்பு மொத்தமாக தீயில் சேதமடைந்துள்ளதுடன் அதில் ஒரு சிறுமி பற்றியெரியும் குடியிருப்பில் இருந்து தப்பிக்க முயன்று, முடியாமல் உடல் கருகி பலியாகியுள்ளார்.
குடும்பத்தின் வளர்ப்பு நாய் மட்டும் அக்கம்பக்கத்தினரால் காப்பாற்றப்பட்டுள்ளதுடன் முதற்கட்ட விசாரணையில், திட்டமிட்டே குடியிருப்புக்கு நெருப்பு வைத்ததற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக மேற்கு ஜோர்டான் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வெளியான தகவல்
வெளியான தகவல்களின் அடிப்படையில் அந்தக் குடும்பம் இரண்டு வருடங்களுக்கு முன்பு வெனிசுலாவிலிருந்து அமெரிக்காவிற்கு வந்துள்ளது.
இந்தநிலையில், குடும்பத்தில் மனைவி தொடர்ந்து கணவனால் துன்புருத்தப்பட்டு வந்த போது ஆவணங்கள் இல்லாதவர் என்பதாலும் நாடுகடத்தப்படுவோமோ என்ற பயத்தாலும் அவர் காவல்துறைக்குச் செல்லவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகள் ஆவணமில்லாத புலம்பெயர் மக்களை குறிவைத்து வரும் நிலையில், நடவடிக்கைகளுக்கு பயந்து இந்த முடிவுக்கு வந்திருக்கலாம் என்ற சந்தேகமும் அதிகாரிகள் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
