கொட்டாஞ்சேனை தமிழரின் படுகொலை: காவல்துறை பொறுப்பதிகாரிக்கு வந்த மர்ம அழைப்பு!
கடந்த மாதம் 21 ஆம் திகதி கொட்டாஞ்சேனையில் தமிழர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, கொட்டாஞ்சேனை காவல் நிலைய பொறுப்பதிகாரிக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கொலை மிரட்டல் விடுத்த சந்தேகநபர்களை உடன் கைது செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
"மோதர நிபுண" என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒரு நபரால் இந்த கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூடு
கடந்த பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி கொட்டாஞ்சேனை, கல்பொத்த சந்தியில் அமைந்துள்ள ஒரு வர்த்தக நிலையமொன்றின் உரிமையாளர், மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அதே நாளில் தப்பி ஓடிய இரண்டு துப்பாக்கிதாரிகளையும் கைது செய்தனர் மற்றும் துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை மீட்டனர்.
பின்னர், சந்தேகநபர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை காண்பிப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
கொலை மிரட்டல்
அதன் போது, சந்தேகபர்கள் இருவரும் காவல்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்த முற்பட்டபோது, காவல்துறை அதிகாரிகளின் துப்பாக்கிச் சூட்டில் இருவரும் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் ஜனவரி 22 ஆம் திகதி அதிகாலையில் நடந்தது, அதன் பிறகு சிறிது நேரத்திலேயே, கொட்டாஞ்சேனை காவல்துறை பொறுப்பதிகாரி கோசல லியனாராச்சிக்கு உள்ளூர் தொலைபேசி எண்ணிலிருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
