மதுபான விற்பனை குறித்து மதுவரித் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு!
பியர் மற்றும் வைன் போன்ற மதுபானங்களை விற்பனை செய்வதற்கு இதுவரை அனுமதி வழங்கப்படாத சில இடங்களுக்கு சட்டப்பூர்வமாக அனுமதி வழங்க மதுவரித் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
சுற்றுலாப் பயணிகளுக்கான உணவு, பானங்கள் மற்றும் தங்குமிடங்களை வழங்குவதற்கான வர்த்தக அனுமதிப் பத்திரங்களை பெற்றுக்கொண்டுள்ள இடங்களுக்கு இந்த அனுமதி வழங்கப்படவுள்ளது.
உணவகங்கள், ஹொட்டல்கள், தங்குமிடங்களை வழங்கும் வீடுகளை சட்ட வரையறைக்குள் கொண்டு வந்து, அவற்றின் உரிமையாளர்கள் மாத்திரமல்லாது சுற்றுலாப் பயணிகள் எதிர்நோக்கும் எதிர்பாராத சிரமங்களை குறைப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்களம் கூறியுள்ளது.
சம்பந்தப்பட்ட இடங்களை சட்ட ரீதியாக மதுபானங்களை விற்பனை செய்யும் இடங்களாக உள்ளடக்குவதன் மூலம் சட்டத்திற்கு உட்பட்டு மற்றும் தரமான மதுபானங்கள் மாத்திரம் அவற்றில் விற்பனை செய்யப்படுகிறது என்பதை உறுதிப்படுத்த முடியும் என மது வரி திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
சுற்றுலாத்துறை அமைச்சி மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசைபை ஆகியவற்றின் உதவியுடன் நிதி அமைச்சு மற்றும் அரச நிதிக்கொள்கை திணைக்களத்தின் அனுமதியுடன் இவ்வாறு பியர் மற்றும் வைன் ஆகிய மதுபானங்களை விற்பனை செய்வதற்காக மதுவரி அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொடுக்கும் முறையை படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.