கனடாவில் கிராமம் ஒன்றில் வசிக்கும் மக்கள் எடுத்துள்ள முடிவு
கிராமத்தை விட்டே வெளியேற முயற்சி
கனடாவில் கிராமம் ஒன்றில் வசித்து வரும் மக்கள் அந்தக் கிராமத்தை விட்டே வெளியேறுவதற்கு உத்தேசித்துள்ளனர்.
நியூபவுன்ட்லாண்ட்டின் கரையோர கிராமத்தைச் சேர்ந்த மக்கள் இவ்வாறு ஒட்டுமொத்தமாக வெளியேறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அடிப்படை வசதிகள் இல்லாது, ஏனைய நகரங்களுடன் தொடர்பற்று காணப்படுவதனால் இவ்வாறு அவர்கள் முடிவெடுத்துள்ளனர்.
மாகாண நிர்வாகத்திடம் கிராம மக்கள் கோரிக்கை
கவுல்டோயிஸ் என்ற மீனவ கிராமத்தில் தற்பொழுது மிகவும் சொற்ப எண்ணிக்கையிலான மக்களே வாழ்ந்து வருகின்றனர். தங்களை வேறு ஓர் இடத்தில் மீள்குடியேற்றுமாறு மாகாண நிர்வாகத்திடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்னும் சில தசாப்தங்களில் வெற்றுக் கிரமமாக மாற்றமடைந்து விடும் என அதிகாரிகள் எதிர்வுகூறியுள்ளனர்.
இந்தக் கிராமத்தில் வயது முதிர்ந்தவர்கள் மட்டுமே வாழ்ந்து வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். நோய் நிலைமைகளின் போது அவர்களினால் உரிய வகையில் சிகிச்சை பெற்றுக்கொள்ள முடிவதில்லை எனவும் இதனால் வேறும் பிரதான நகரங்கள் நோக்கி மக்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் கிராமத்திற்கு செல்ல வேண்டுமாயின் படகு அல்லது ஹெலிகொப்டர் மூலம் மட்டுமே செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.