ஜோர்தானில் சிக்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

Manusha Nanayakkara Sri Lanka Jordan Foreign Employment Bureau
By Sathangani Jan 12, 2024 10:15 AM GMT
Report

ஜோர்தானில் வேலையிழந்த ஆடைத் தொழிற்சாலை தொழிலாளர்களான இலங்கையர்கள் மீது வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார கவனம் செலுத்தியுள்ளார்.

இதன்படி, தொழிற்சாலைகள் மூடப்பட்டதன் காரணமாக பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் ஜோர்தானிலுள்ள இலங்கை தூதரக அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜோர்தானில் உள்ள இலங்கைத் தூதரகமும் அதன் தொழிலாளர் நலப் பிரிவும் சம்பந்தப்பட்ட ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்படுவதால் தொழிலாளர்களுக்கு ஏற்படும் அநீதி தொடர்பாக ஜோர்தானில் உள்ள தொழிலாளர் திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளனர்.

சிறிலங்காவின் 9 ஆவது அதிபராக அநுர குமார திஸாநாயக்க : லால் காந்த விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு

சிறிலங்காவின் 9 ஆவது அதிபராக அநுர குமார திஸாநாயக்க : லால் காந்த விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு

இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை

இந்த தொழிலாளர்களை இலங்கைக்கு அனுப்ப விமான டிக்கெட்டுகளை வழங்க முடியும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் இலங்கைத் தூதரகமும் அதன் தொழிலாளர் நலப் பிரிவும் அதில் திருப்தி அடையவில்லை.

ஜோர்தானில் சிக்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் | Decision Of Regarding Sri Lankans Stuck In Jordan

பின்னர் இந்தியா மற்றும் பங்களாதேஷைப்  பிரதிநிதித்துவப்படுத்தும் ஜோர்தானில் உள்ள தூதுவர்களுடன் சேர்ந்து, அந்த நாட்டில் உள்ள தொழிலாளர் அமைச்சு அதிகாரிகளை சமூக காப்பீட்டு நிதியத்தின் மூலம் இழப்பீடு வழங்குமாறு கேட்டுக் கொண்டனர்.

இந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியம், கொடுப்பனவுகள் மற்றும் சமூக பாதுகாப்பு இழப்பீடு ஆகியவற்றின் நிலுவைத் தொகையைப் பெறுவதற்கு ஜோர்தானிய சட்ட ஆலோசனை நிறுவனத்திற்கு உதவுமாறு பணியகத்தின் தலைவர், ஏ.எம். ஹில்மி , தூதரக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

அத்துடன், தற்போது ஜோர்தானில் செல்லுபடியான வீசா இன்றி தங்கியுள்ள தொழிலாளர்களுக்கு அபராதம் எதுவும் விதிக்கப்படாமல் நாட்டுக்கு அழைத்து வருமாறும், தங்கியிருக்க விரும்பும் 62 இலங்கையர்களுக்கு புதிய பணியிடங்களை வழங்குவதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்: இன்றைய நாணயமாற்று வீதம்

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்: இன்றைய நாணயமாற்று வீதம்

220 இலங்கைத் தொழிலாளர்கள் 

தற்போது, ​​சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் தொழிற்சாலைக்கு சொந்தமான தங்கும் விடுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், தூதரகத்தின் கோரிக்கைகளுக்கு பதில் கிடைத்ததையடுத்து, இம்மாதத்திற்குள் இந்த தொழிலாளர்களை இலங்கைக்கு அனுப்புவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

ஜோர்தானில் சிக்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் | Decision Of Regarding Sri Lankans Stuck In Jordan

ஜோர்தானில் உள்ள ஒரு நிறுவனத்தில் 153 இலங்கைத் தொழிலாளர்களும் மற்றைய ஆடைத் தொழிற்சாலையில் 67 தொழிலாளர்களும் பணிபுரிந்தனர்.

இதேவேளை, குறித்த நிறுவனமொன்றில் பணியாற்றிய இலங்கைத் தொழிலாளர்களின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள கடிதத்தில், உணவு, தண்ணீர், மின்சாரம் போன்ற அடிப்படைத் தேவைகளை தட்டுப்பாடு இன்றி பெற்று வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

நெருக்கடிக்குள்ளாகியுள்ள சிறிலங்கன் எயார்லைன்ஸ்: பயணங்கள் தாமதமானதால் குழப்பம்

நெருக்கடிக்குள்ளாகியுள்ள சிறிலங்கன் எயார்லைன்ஸ்: பயணங்கள் தாமதமானதால் குழப்பம்

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நிதியுதவி 

இந்த இரண்டு ஆடைத் தொழிற்சாலைகளிலும் உள்ள இலங்கைப் பணியாளர்களின் மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான நிதியை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அனுப்பி வைத்துள்ளது.

ஜோர்தானில் சிக்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் | Decision Of Regarding Sri Lankans Stuck In Jordan

தொழிலாளர் நலத் திணைக்கள அதிகாரிகள் தொடர்ந்தும் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களை அவதானித்து வருவதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிடுகிறது.

இவ் ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் மூன்று சட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடப்பட்டு, அவர்களின் ஆலோசனைகளைப் பெற்ற பின்னர், ஊழியர்களின் சம்மதத்துடன் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

அனைத்து நடவடிக்கைகளும் நிறைவடைந்ததன் பின்னர் இலங்கைப் பணியாளர்கள் நாடு திரும்பவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் தொலைபேசி அழைப்பில் நூதன திருட்டு! கையும் களவுமாக சிக்கிய இருவர்

யாழில் தொலைபேசி அழைப்பில் நூதன திருட்டு! கையும் களவுமாக சிக்கிய இருவர்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
நன்றி நவிலல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019