ஜோர்தானில் இருந்து இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்த இலங்கையர்கள் : பயங்கரவாதிகளாக கருதப்படலாம் என எச்சரிக்கை

Sri Lanka Israel Jordan Foreign Employment Bureau Israel-Hamas War
By Eunice Ruth Oct 21, 2023 06:30 PM GMT
Eunice Ruth

Eunice Ruth

in சமூகம்
Report

சட்ட விரோதமான முறையில் ஜோர்தானில் இருந்து இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்த இரு இலங்கையர்கள் மீண்டும் ஜோர்தானிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா இதனை தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனுக்கு இடையிலான போர் தீவிரமடைந்து வரும் பின்னணியில், குறித்த தரப்பினர் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

ஜோர்தானில் இருந்து இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்த இலங்கையர்கள் : பயங்கரவாதிகளாக கருதப்படலாம் என எச்சரிக்கை | Sri Lankans Illegal Migration Israel Terrorist

சட்டவிரோதமாக குடியேறிய இலங்கையர்கள்

ஜோர்தானில் இருந்து இஸ்ரேலுக்கு சட்ட விரோதமான முறையில் குடிபெயர்ந்த இரு இலங்கை பெண்கள் இஸ்ரேல் சட்ட இயக்குனரக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

குறித்த தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஜோர்தானிடம் ஒப்படைக்கப்பட்ட இலங்கையர்கள்

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட இரண்டு பெண்களும் மீண்டும் ஜோர்தானிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.

ஜோர்தானில் இருந்து இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்த இலங்கையர்கள் : பயங்கரவாதிகளாக கருதப்படலாம் என எச்சரிக்கை | Sri Lankans Illegal Migration Israel Terrorist

சட்டவிரோதமான முறையில் எல்லையை கடந்து வேறு நாட்டுக்கு செல்வது மிகவும் பாரதூரமான குற்றச்சாட்டெனவும் அது தவறான நடத்தை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டவிரோதமாக புலம்பெயர்பவர்கள் பயங்கரவாதிகள்

யுத்த சூழ்நிலையில் நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக புலம்பெயர்ந்து செல்லும் தரப்பினர் பயங்கரவாதிகளாக கருதப்படும் வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

அத்துடன், இஸ்ரேல் போன்ற நாடுகளில் சட்ட விரோதமான முறையில் புலம்பெயர்ந்து, அந்த நாட்டு சட்ட இயக்குனரக அதிகாரிகளால் கைது செய்யப்படுவபர்களுக்காக யாரும் முன்னிலையாக மாட்டார்கள் எனவும் காமினி செனரத் யாப்பா சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜோர்தானில் இருந்து இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்த இலங்கையர்கள் : பயங்கரவாதிகளாக கருதப்படலாம் என எச்சரிக்கை | Sri Lankans Illegal Migration Israel Terrorist

மேலும், சட்ட விரோதமான முறையில் எல்லை தாண்டும் இலங்கையர்கள் தொடர்பில் சிறிலங்கா வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எந்த வகையிலும் தலையிடாது எனவும் பொறுப்பேற்காது எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   

பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக யாழில் போராட்டம்

பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக யாழில் போராட்டம்

ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025