உயிர் ஆபத்தில் இருக்கும் இரண்டு சட்டத்தரணிகள்! எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
அக்குரேகொடவில் படுகொலை செய்யப்பட்ட சட்டத்தரணி புத்திக மல்லவராச்சியின் இரண்டு கனிஷ்ட சட்டத்தரணிகள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகள் பாதுகாப்பு அதிகாரசபையில் (NAPCW) முறைப்பாடொன்று பதிவு செய்துள்ளனர்.
அதில், கரந்தெனிய சுத்தாவிடமிருந்து தங்களுக்கு உயிர் அச்சுறுத்தல்கள் உள்ளதாகவும் பாதுகாப்பு கோருவதாகம் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட சட்டத்தரணியின் அறிவுறுத்தலின் பேரில் இந்த இரண்டு சட்டத்தரணிகளும் பல்வேறு குற்றவாளிகளுக்காக முன்னிலையாகியுள்ளதாக கூறப்படுகிறது.
சட்டத்தரணிகளுக்கு பாதுகாப்பு
கரந்தெனிய சுத்தவின் போட்டியாளரான பாதாள உலகத் தலைவரான லொக்கு பெட்டி சார்பாக வழக்குகளுக்காக முன்னிலையானதற்காக சட்டத்தரணி புத்திக மல்லவராச்சியும் அவரது மனைவியும் கொலை செய்யப்பட்டதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தக் கொலை ஒப்பந்தத்தை கரந்தெனிய சுத்தா நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது, மேலும் சுத்தாவின் வழக்குகள் பற்றிய பல தகவல்கள் அவரது மனைவிக்கும் தெரிந்திருந்ததால் அவரும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், கொலை செய்யப்பட்ட சட்டத்தரணியின் இரண்டு கனிஷ்ட சட்டத்தரணிகளுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |