பேரிடர் நிவாரண பணிகளில் இருந்து விலகும் அரச அதிகாரிகள்!
டித்வா சூறாவளி காரணமாக ஏற்பட்ட பேரழிவுக்குப் பின்னர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த அரசு அதிகாரிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பல தொழிற்சங்கங்கள், இன்று(27) முதல் நிவாரண பணிகளில் இருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளன.
அகில இலங்கை பேரிடர் நிவாரண சேவைகள் தொழிற்சங்கம், தொழில்நுட்ப அதிகாரிகள் தொழிற்சங்கம் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சங்கங்கள் வெளியிட்ட கூட்டு அறிக்கையில் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையின்படி, டித்வா ஏற்படுத்திய பரவலான பேரழிவுக்கு பின்னர் 93 நாட்களுக்கு மேலாக, பேரிடர் நிவாரண அதிகாரிகளும் கிராம உத்தியோகத்தர்களும் பகலும் இரவும் தொடர்ந்து பணியாற்றி, அரசு மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கிடையே முக்கிய ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டு வந்துள்ளனர்.
அரசாங்கத்தின் கவனம்
மேலும், தொழில்நுட்ப அதிகாரிகள் இழப்பீடு மற்றும் நிவாரண தொகைகள் வழங்க தேவையான மதிப்பீடுகள் மற்றும் செலவுத்திட்டங்களை தயாரித்து அடி மட்டத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இத்தகைய அர்ப்பணிப்பான பணிகளுக்குப் பிறகும், நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அரசு போதிய கவனம் செலுத்தவில்லை என தொழிற்சங்கங்கள் குற்றஞ்சாட்டுகின்றன. இதனால், ஒருங்கிணைந்த தொழிற்சங்க நடவடிக்கை தவிர்க்க முடியாததாக மாறியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |