இலங்கை கிரிக்கெட் அணியின் தோல்வி! மலிங்க உருக்கம்
இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க, கிரிக்கெட் ரசிகர்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என்றும், மற்றொரு ஐ.சி.சி உலகக் கோப்பை வெற்றியை அடைய முடியும் என்றும் வலியுறுத்தி தேசிய அணியை தொடர்ந்து ஆதரிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ முகப்புத்தக கணக்கில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அத்தோடு, அதில் 1996 ஆம் ஆண்டு ஐ.சி.சி உலகக் கோப்பை வெற்றியிலிருந்து இலங்கையின் கிரிக்கெட் பயணத்தை அவர் நினைவுகூர்ந்துள்ளார்.
ரசிகர்களின் நிலைத்த ஆதரவு
சில போட்டிகளில் ஆரம்ப கட்டத்திலேயே வெளியேறியதும், நான்கு உலகக் கோப்பை இறுதிப்போட்டிகளில் தோல்வி கண்டதும் இருந்தபோதிலும், உண்மையான ரசிகர்கள் அணியை விட்டு விலகவில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த உறுதியான பொறுமையும் நம்பிக்கையும் தான் 2014 ஆம் ஆண்டு ஐ.சி.சி உலகக் கோப்பை வெற்றிக்கு வழிவகுத்ததாக மலிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, 2014 வெற்றிக்கு முன் 18 ஆண்டுகள் போராடிய ரசிகர்களின் நிலைத்த ஆதரவே அணிக்கு மகத்தான வெற்றியைத் தந்ததாக அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், விட்டுக்கொடுப்பது விளையாட்டுக்கு தீர்வாகாது என சுட்டிக்காட்டிய மலிங்க, கடந்த வெற்றிக்கு பின் 12 ஆண்டுகள் கடந்திருந்தாலும், அறிவார்ந்த மற்றும் ஆர்வமுள்ள ரசிகர்கள் தொடர்ந்து அணியுடன் நிற்பதாகவும், அடுத்த உலகக் கோப்பை கைப்பற்றும் வரை அவர்கள் ஆதரிப்பார்கள் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |