ரி20 உலககிண்ண தொடர் : மேற்கிந்திய தீவுகளை தோற்கடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றது தென்னாபிரிக்கா
ரி20 உலககிண்ண தொடரில் இன்று (26) இடம்பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாபிரிக்கா அணி 9 விக்கெட்டுக்களால் அபார வெற்றிபெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இப்போட்டி பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமானது.
அதன்படி, போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 176 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இலகுவாக வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி
177 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி 16.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரமே இழந்து போட்டியில் இலகுவாக வெற்றி பெற்றது.

தென்னாபிரிக்க அணி சார்பில் அணித் தலைவர் எய்டன் மர்க்ரம் 82 ஓட்டங்களையும், குயின்டன் டி கொக் 47 ஓட்டங்களையும், ரியான் ரிக்கல்டன் 45 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
images -criinfo
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |