ஏ9 வீதியில் பேருந்து மோதி பெண்ணொருவர் பலி! சாரதி தப்பியோட்டம்
கண்டி - யாழ்ப்பாணம் ஏ9 பிரதான வீதியின் மதவாச்சி நகரில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்று, பாதசாரியான பெண் மீது மோதியதில் நேற்று (26) இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான குறித்த பெண், உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மதவாச்சி காவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறையினர் மேலதிக விசாரணை
உயிரிழந்த பெண் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் அவரது அடையாளம் மற்றும் விவரங்களைக் கண்டறியும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

விபத்து நிகழ்ந்த சந்தர்ப்பத்தில் தனியார் பேருந்தின் சாரதியும் அவரது உதவியாளரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் அவர்களைக் கைது செய்வதற்காக மதவாச்சி காவல் நிலைய போக்குவரத்துப் பிரிவு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது,
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |