பேராதனை பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான அறிவிப்பு
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் 06 பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் டிசம்பர் 29 ஆம் திதிக்குள் முழுமையாக மீண்டும் தொடங்கும் என்று பேராதனைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் டபிள்யூ. எம். டி. மதுஜித் தெரிவித்தார்.
டித்வா சூறாவளியின் தாக்கத்தால் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டியிருந்தது, மேலும் 03 பீடங்களின் நடவடிக்கைகள் டிசம்பர் 16 ஆம் திகதி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.
மருத்துவ பீடம், இணை சுகாதார பீடம் மற்றும் பொறியியல் பீடம்
அதன்படி, மருத்துவ பீடம், இணை சுகாதார பீடம் மற்றும் பொறியியல் பீடம் ஆகியவை பரீட்சை நடவடிக்கைகள் காரணமாக இந்த முறையில் தொடங்கப்பட்டன என்று துணைவேந்தர் கூறினார்.

விவசாய பீடம், கால்நடை மருத்துவ பீடம் மற்றும் பல் மருத்துவ பீடம் ஆகியவை டிசம்பர் 29 ஆம் திகதி தொடங்கும் என்றும், கலைப் பீடம் மற்றும் விஞ்ஞான பீடம் ஜனவரி 5 ஆம் திகதி தொடங்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மாணவர்களை அனுப்புவது ஆபத்தானது
இந்தப் பேரிடரால் அதிகம் பாதிக்கப்பட்ட முகாமைத்துவ பீடத்தின் கட்டிடங்களில் ஒன்றிற்கு மாணவர்களை அனுப்புவது ஆபத்தானது என்றும், இது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும் பேராசிரியர் டபிள்யூ.எம்.டி. மதுஜித் தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்று பேராதனை பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட புதிய மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் முன்னர் திட்டமிட்டபடி பெப்ரவரி 10 ஆம் திகதி தொடங்கும் என்றும் அவர் கூறினார்.
முகாமைத்துவ பீடத்தின் ஏனையகுழுக்களுக்கான கல்விச் செயற்பாடு படிப்படியாகத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் துணைவேந்தர் குறிப்பிட்டார்.
பல்கலைக்கழகத்திற்கு ஏற்பட்ட நேரடி சேதம்
சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளத்தால் பல்கலைக்கழகத்திற்கு ஏற்பட்ட நேரடி சேதம் ரூ. 4 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது என்றும், அதற்கான மதிப்பீடு உயர்கல்வி அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.

இருப்பினும், எந்தவொரு தனிநபரும் அல்லது குழுவும் பல்கலைக்கழகத்திற்குத் தேவையான பொருள் மற்றும் நிதி உதவிகளை வழங்கத் தயாராக இருந்தால், பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் அது தொடர்பான இலக்கங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அதன்படி, இந்த விஷயத்தில் யார் வேண்டுமானாலும் உதவலாம்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |