சட்டத்தரணிகளின் உயிர் அச்சுறுத்தல்! அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு
புலனாய்வு அறிக்கைகளின் படி, சட்டத்தரணிகளின் உயிர் அச்சுறுத்தல் மதிப்பாய்வு செய்யப்பட்டு தேவையான பாதுகாப்பு வழங்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
சட்டத்தரணிகள் தங்கள் தொழில்பணிகளை பாதுகாப்புடன் மேற்கொள்ள அரசு உறுதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து அவரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடு
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், குற்றவாளிகளால் அச்சுறுத்தல் இருக்கக்கூடிய நீதிபதிகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் சட்டத்துறையின் தொழில்பணிகளில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும், எந்த சட்டத்தரணிக்கும் எந்த சந்தேகநபருக்கும் வாதாடும் உரிமை அரசியலமைப்பால் உறுதி செய்யப்பட்ட ஒன்று என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொலை விசாரணை
இந்த கொலைச் சம்பவம் தனிப்பட்ட ஒன்று என்றும், தேசிய பாதுகாப்புக்கு எந்தவித அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையா, அல்லது அரசியல் பின்னணி உள்ளதா என்பதை உறுதிப்படுத்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |