யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகம் “இலங்கை வவுனியா பல்கலைக்கழகமாக” பிரகடனம்! வெளியானது அதிவிசேட வர்த்தமானி
sri lanka
vavuniya
jaffna university
univercity
By Shalini
யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம், 'இலங்கை வவுனியா பல்கலைக்கழகம்' என அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸின் கையொப்பத்துடன், இதுதொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று (08) வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, “யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகம்” என்ற பெயர், எதிர்வரும் ஜுலை மாதம் 31 ஆம் திகதியுடன் நீக்கப்பட்டு, ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல், “இலங்கை வவுனியா பல்கலைக்கழகம்” என்ற பெயர் அமுலாகும்.
இந்தப் பல்கலைக்கழகம் உள்நாட்டு மூலவள அடிப்படையினுள் விழுமியத்தை உருவாக்குதல் பற்றி மாணவர்களுக்குக் கல்வி புகட்டுவதன் மூலம் கூடுதலான அழுத்தத்தைக் கொண்டிருத்தல் வேண்டும் என்று வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்