சிறையிலுள்ள முக்கிய புள்ளியின் இருநூறு மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வீடு பறிமுதல்
Sri Lanka Police
Prisons in Sri Lanka
Drugs
By Sumithiran
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தற்போது சிறையில் உள்ள 'தீகல சமன்' என்ற அஜித் பெரேராவின் ஆடம்பர வீட்டை சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு பறிமுதல் செய்துள்ளது.
இருநூறு மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள இந்த வீடு, அவிசாவெலவின் தெஹியோவிட்டவில் அமைந்துள்ளது.
எஜமானிக்காக வாங்கப்பட்ட வீடு
இந்த வீடு அவரது எஜமானிக்காக வாங்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சந்தேக நபரால் வீட்டை வாங்குவதற்கு பணம் எவ்வாறு சம்பாதித்தார் என்பதை விளக்க முடியாததால், அது போதைப்பொருள் கடத்தலில் இருந்து சம்பாதித்த பணத்தில் வாங்கப்பட்டதாக காவல்துறையினர்சந்தேகிக்கின்றனர்.
அதன்படி, சம்பந்தப்பட்ட வீட்டைக் கைப்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
குருதியால் நனைந்த ஈழ நாட்காட்டியில் குமாரபுரம் படுகொலையின் நினைவுகள்… 17 மணி நேரம் முன்