இந்திய சிறையில் இருந்து விடுதலையான இலங்கை கடற்றொழிலாளர்கள்! விடுதலை ஆகி பல மாதம் ஆகியும் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள அவலம்

Fishing Sri Lanka India Sri Lanka Fisherman Ship
By Shalini Balachandran Mar 22, 2024 07:44 AM GMT
Report

கடந்த வருடம் இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையின் மன்னார் பிரதேச கடற்றொழிலாளர்களை இலங்கைக்கு அழைத்து வந்து தம்மிடம் ஒப்படைக்குமாறு அவர்களின் உறவினர்கள் கடற்றொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த வருடம் தலைமன்னார் பகுதியில் இருந்து கடற்றொழிலுக்காக சென்ற தலைமன்னார் கிராமம் பகுதியை சேர்ந்த இரு கடற்றொழிலாளர்கள் இயந்திர கோளாரு காரணமாக இந்திய கடற்பகுதியில் சிக்கிய நிலையில் இந்திய கடற்றொழிலாளர்களால் மீட்கப்பட்டு தமிழக கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த கடற்றொழிலாளர்கள் இந்திய கடலோர காவற்படை மேற்கொண்ட விசராணையின் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டு மூன்று மாதங்களுக்கும் முன்னர் இவர்கள் இயந்திர கோளாரின் காரணாமாகவே கரை ஒதுங்கியுள்ளனர் என்ற அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

அஸ்வெசும விண்ணப்பங்கள் குறித்து வெளியான அறிவிப்பு

அஸ்வெசும விண்ணப்பங்கள் குறித்து வெளியான அறிவிப்பு

சிறப்பு முகாம்

இருப்பினும் விடுதலை செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேலாகியும் இரு கடற்றொழிலாளர்களும் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படாத நிலையில் தற்போது சிறப்பு முகாம் ஒன்றில் அடைக்கப்பட்டுள்ளதாக இரு கடற்றொழிலாளர்களின் குடும்பத்தினரும் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்திய சிறையில் இருந்து விடுதலையான இலங்கை கடற்றொழிலாளர்கள்! விடுதலை ஆகி பல மாதம் ஆகியும் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள அவலம் | Demand For Release Mannar Fishermens Indian Camp

இந்திய கடற்றொழிலாளர்கள் எமது பகுதியில் சட்ட விரோத கடற்றொழிலில் ஈடுபட்டு எமது வளங்களை அழிக்கும் போதும் மற்றும் கைதாகும் போதும் எமது மக்களும் அரசாங்கமும் நல்லெண்ண அடிப்படையில் அவர்களை விடுதலை செய்யும் போது இந்திய அரசாங்கம் மாத்திரம் சிறையில் பல மாதங்கள் வைத்திருப்பதும் மற்றும் சிறையில் இருந்து விடுதலையான பின்னரும் சிறப்பு முகாம்களில் வைத்திருப்பதும் தங்களுக்கு மன வேதனை அளிப்பதாகவும் இரு கடற்றொழிலாளர்களின் குடும்பத்தினரும் தெரிவித்துள்ளனர்.

கடற்றொழில்

கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்கள்! கனேடிய ஊடகங்களுக்கு ஹரீன் பெர்னாண்டோ பாராட்டு

கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்கள்! கனேடிய ஊடகங்களுக்கு ஹரீன் பெர்னாண்டோ பாராட்டு

இந்த நிலையில், குறித்த இரு கடற்றொழிலாளர்களை இலங்கைக்கு அழைத்து வந்து தம்மிடம் ஒப்படைக்குமாறு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கடற்றொழில் அமைச்சர் உட்பட அனைத்து தரப்பினருக்கும் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

இந்திய சிறையில் இருந்து விடுதலையான இலங்கை கடற்றொழிலாளர்கள்! விடுதலை ஆகி பல மாதம் ஆகியும் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள அவலம் | Demand For Release Mannar Fishermens Indian Camp

இவ்வாறு குறித்த விடயம் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவிடம் வினவிய போது, இது தொடர்பில் தன்னிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ள நிலையில் தான் இந்திய பிரதிநிதிகளிடம் பேசியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதேநேரம், இந்திய சிறைச்சாலைகளில் உள்ள கடற்றொழிலாளர்களை விடுதலை தொடர்பிலும் அங்கு கையகப்படுத்தப்பட்டுள்ள கடற்றொழிலாளர்களின் படகுகளை விடுவிப்பது தொடர்பிலும் தான் தொடர்ந்து பேசி கொண்டிருப்பதாகவும் விரைவில் இரு கடற்றொழிலாளர்களையும் நாட்டுக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கை இடம்பெறுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழில் தடம்புரண்ட எரிபொருள் தாங்கி! ஏ9 வீதி பூராகவும் பரவிய பெட்ரோல்

யாழில் தடம்புரண்ட எரிபொருள் தாங்கி! ஏ9 வீதி பூராகவும் பரவிய பெட்ரோல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026