ஐ.பி.சி தமிழ் வெளிச்சம் போட்ட பிரச்சினை! ஈரானில் சிக்கிய தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்களை மீட்க கோரிக்கை
ஈரானிலுள்ளத் தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்களை பாதுகாத்து, அழைத்துவர வலியுறுத்தி இந்திய ஒன்றிய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க - இஸ்ரேலின் ஈரான் மீதானப் போரால் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய கடற்றொழிலாளர்கள் 612-பேர் ஈரானில் சிக்கித் தவிக்கின்றனர்.
இந்த செய்தியை எமது ஊடகமான ஐ.பி.சி தமிழ் ஊடகம் உலகத்தின் பார்வைக்கும் இந்திய அரசின் பார்வைக்கும் கொண்டுவந்ததன் அடிப்படையில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்திய ஒன்றிய அரசு
இன்றளவிலும் இவர்களை மீட்டெடுத்திட இந்திய ஒன்றிய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஆர்பாட்டகாரர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

சமதா கட்சி சார்பாக இதனைக் கண்டித்து இன்று முற்பகல் 11.00 மணியளவில் சென்னை, நுங்கம்பாக்கம், சாஸ்திரி பவன் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்த இந்த 612 கடற்றொழிலாளர்களை உடனடியாக மீட்டெடுத்திட வலியுறுத்தி கோரிக்கைகளை முன்னத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
