குமுதினிப் படுகொலை: ஈழத் தமிழ் மக்களுக்கு கடலே சவக்குழியானது!...

Sri Lankan Tamils Tamils Sri Lankan Peoples Sri Lanka Navy
By Theepachelvan May 16, 2026 06:31 AM GMT
Report
Courtesy: தீபச்செல்வன்

இலங்கை அரச படைகள், கடலில் நடத்திய படுகொலைகளுக்கு நீண்ட வரலாறு உண்டு. நிலத்தில் எவ்வாறு உரிமைகள் மறுக்கப்பட்டனவோ அவ்வாறே ஈழக் கடலிலும் உரிமைகள் மறுக்கப்பட்டன.

நிலத்தில் எவ்வாறு இனப்படுகொலைகள் நடாத்தப்பட்டனவோ அவ்வாறே கடலிலும் இனப்படுகொலைகள் நடாத்தப்பட்டன. ஈழ இறுதிப் போரின் போது அழிக்கப்பட்ட தமிழ் மக்கள் நந்திக்கடலில் கொன்று எரியப்பட்டனர்.

அதற்கு முன்பாகவே கடலில் பல இனக் கொலைகள் நடந்திருக்கின்றன. அதில் ஒன்றுதான் குமுதினிப்படுகொலை.

அதிகரிக்கும் வாகன விலைகள்! வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சித் தகவல்

அதிகரிக்கும் வாகன விலைகள்! வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சித் தகவல்

ஈழத் தீவுகளில் ஒன்று

ஈழத்தின் சப்த தீவுகளில் ஒன்று நெடுந்தீவு. ஈழத்தின் மிகப் பெரிய தீவு என்பதனால் நெடுந்தீவு என அழைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்துடன் ஒப்பிடுகின்ற போது, அடிப்படைவசதிகளற்ற நிலையில் இருக்கிறது நெடுந்தீவு.

எனினும் பல அறிஞர்களையும் கலைஞர்களையும் ஈழத்திற்கு அளித்த மிக முக்கியமான தீவு இதுவாகும். இத் தீவுக்கான போக்குவரத்து புங்குடுதீவில் இருந்து படகு வழியாகவே அன்று தொட்டு இன்றுவரையில் மேற்கொள்ளப்படுகின்றது.

மே 15ஆம் நாள். 1985ஆம் ஆண்டு. நெடுந்தீவின் மாவலித்துறையில் இருந்து நயினாதீவின் குறிகாட்டுவான் துறைமுகத்திற்கு குமுதினிப் படகு பயணிகளை சுமந்து சென்றது. அன்றைக்கு காலையில் 7.15மணிக்கு 64 பயணிகளை ஏற்றிய குமுதினிப்படகு, நயினாதீவுக்குச்சென்றது. வழமைபோலான பயணம்.

கடலை ரசித்தபடி சென்ற மக்களுக்கு இலங்கை கடற்படையின் அச்சம் உள்ளுக்குள் இருந்தது. ஆனாலும் எதிர்பாராதபடி இலங்கை இராணுவத்தின் இரண்டு பிளாஸ்டிக் படகுகள் சூழ்ந்தன. இடைமறித்த படகுகளை கண்டு மக்கள் திகைத்துப் போயினர்.

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு பேரிழப்பு! முக்கிய தலைவரை வீழ்த்தியது அமெரிக்கா

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு பேரிழப்பு! முக்கிய தலைவரை வீழ்த்தியது அமெரிக்கா

கடலில் இனவழிப்பு அட்டூழியம்

இலங்கை அரச படைகளை சேர்ந்த ஆறு பேர் முக்கோண கூர்க்கத்தியும் கண்டங்கோடலிகள் இரும்புக்கம்பிகள் சகிதம் குமுதினியில் ஏறினர். படகின் பின்னால் இருந்த மக்களை படகின் இயந்திர அறைக்கு வருமாறு ஆயுதங்களால் படைகள் மிரட்டினர்.

பின்புறம் இருபுற இருக்கைகளுக்கு நடுவே பலகைகளினால் இயந்திரத்தில் இருந்து பின்புறம் செல்லும் ஆடு தண்டுப்பகுதியை அவர்கள் அகற்றினர். இயந்திய அறை இருக்கை மட்டத்திலிருந்து 4 அடி ஆழமாக இருந்தது.

அதற்குள் ஒவ்வொருவராக அழைக்கப்பட்டனர். பயணிகளோ அச்சத்துடன் உள்ளே சென்றனர்.

இலங்கை அரச படைகள் மிக மோசமான இன அழிப்பாளர்கள் அல்லது கொலையாளிகள் என்பதற்கு அன்றைய காலத்தில் நடந்த இந்தப் படுகொலையே பெரும் சாட்சி. குமுதினிப் படகின் இரு பக்க வாசல்களிலும் சீருடை தரித்த இலங்கை கடற்படையினர் காவலுக்கு நிற்கவே சீருடையற்ற படையினர் இந்தப் படுகொலையைப் புரிந்தனர்.

ஒவ்வொருவராக இயந்திர அறைக்குள் அழைத்த கடற்படையினர், மக்களை கத்தியால் குத்தியும் கோடாலியால் வெட்டியும் இரும்புக் கம்பிளால் தாக்கியும் படுகொலை செய்தனர். கொல்ப்பட்டவர்களை ஆடு தண்டுப்பகுதியில் போட்டனர்.

நாட்டை விட்டு வெளியேறும் ஆயிரக்கணக்கான வைத்தியர்கள்!

நாட்டை விட்டு வெளியேறும் ஆயிரக்கணக்கான வைத்தியர்கள்!

தப்பிய சாட்சி

கொல்லப்பட்டவர்களின் சித்திரவதைகளின் அவல ஒலி கேட்கக்கூடாது என்பதற்காக அவர்கள் பெரையும் ஊரையும் கத்திச் சொல்லுமாறு கடற்படையினர் கூறினர். ஒரு பக்கம் கடல் அரைச்சல்.

மற்றொரு பக்கம் இராணுவத்தின் மிரட்டல். அவலக் குரலை எழுப்பி வாதையை வெளிப்படுத்தாமலே அவர்களில் பலர் இறந்து போயினர். கடுமையாகத் கடற்படை தாக்க குரல் எழுப்பியவர்கள் அதிகளவில் தாக்கப்பட்டு இறந்து விட்டார்கள் என கடற்படையினரால் கருதப்பட்டு கடலில் அவர்கள் வீசப்பட்டனர்.

கடற்படையினரின் அராஜகத்தை கண்ட ஒருவர் கடலில் குதித்தார். அவருடன் சேர்ந்து மேலும் பலர் கடலில் குதித்தனர். அவர்கள்மீதும் துப்பாக்கி பிரயோகம் செய்தனர் படைகள். இந்தப் படுகொலையின் ஒரு நேரடிச் சாட்சி இப்படி சொல்கிறார்.

“எனது தலையில் அடித்தார்கள். நான் விழுந்து விட்டேன். நான் இழுத்துச் செல்லப்படுவதை உணர்ந்தேன். கோடரி போன்ற ஆயுதத்தால் எனது தலையை அடித்தார்கள். வயிற்றிலும் கால்களிலும் அடித்தார்கள்.

பின்னர் ஒரு பள்ளத்தில் வீழ்ந்தேன். நான் இறந்து விட்டதாக நடித்து அப்பாடியே கிடந்தேன். எனக்கு மேல் மேலும் உடல்கள் விழுந்தன. குழந்தைகள், பெண்களின் அவலக்குரலைக் கேட்கக்கூடியதாக இருந்தது.” என திகிலான அவ் நிமிடங்களை விபரித்தார்.

வடக்கில் இடமாற்ற விதிகளுக்கு முரணாக பணியாற்றும் கல்வி அதிகாரிகள் - அம்பலமான உண்மை

வடக்கில் இடமாற்ற விதிகளுக்கு முரணாக பணியாற்றும் கல்வி அதிகாரிகள் - அம்பலமான உண்மை

36பேர் படுகொலை

இந்தக் கொடூரப் படுகொலையின் போது, பிறந்து ஏழு மாதம் மாத்திரமேயான விஸ்வலிங்கம் சுபாசினி என்ற பச்சிளம் பாலகி படுகொலை செய்யப்பட்டார். அத்துடன் எழுபது வயதான தெய்வானை என்ற முதிய தாய் வரையிலாக 36பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

குமுதினிப்படுகொலையில் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்பது தொடர்பில் சரியாக கூற இயலவில்லை என்று சில சர்வதேச அமைப்புக்கள் கூறியிருந்தன. 23பேர் இதன்போது படுகொலை செய்யப்பட்டதாக சர்வதேச மன்னிப்புச் சபை கூறியிருந்தது.

இப்படுகொலையை இலங்கை கடற்படையின் நயினாதீவு கடைப்படையே மேற்கொண்டது என குற்றம் சுமத்தப்பட்ட வேலையில் இலங்கை அரசின் தேசியப் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி இதனை மறுத்திருந்ததுடன், இதனை செய்தது யார் என்று தமக்கு தெரியாது என்றும் குறிப்பிட்டார்.

ஆனால் இலங்கை அரச கடற்படையினரே இதனை செய்தனர் என்பது தெட்டத்ததெளிவானது. அதற்கு பாதிக்கப்பட்ட மக்களே நேரடிச் சாட்சியுகளுமாவார். கடந்த  2006ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதானப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில், 72 பேர் பயணித்த படகில் 36பேர் கொல்லப்பட்டதாகவும் உயிர் தப்பியவர்களின் வாக்குமூலங்களும் அந்த அறிக்கையில் வெளியிடப்பட்டது.

கடலே சவக்குழியான நாள்  

தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் நவம்பர் 22, 2006ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் வெளியிட வாக்குமூலங்களின் அடிப்படையில் இலங்கை அரச படைகள் புரிந்த மிக கொடூரமான படுகொலையாக குமுதினிப்படுகொலை இனம்காணப்பட்டது.

பாதிக்கப்பட்ட மக்களின் வாக்குமூலங்கள் பல விடங்களை வெளிச்சத்திற்கு உட்படுத்தப்படுகின்றது. எனினும் முப்பத்தைந்து ஆண்டுகள் ஆகின்ற இன்றைய நிலையில், இப்படுகொலை குறித்து துளியேனும் நீதி நிலைநாட்டப்படவில்லை.

மே 15 ஈழத் தமிழ் மக்களுக்கு கடலே சவக்குழியான நாள். அதன் பிறகு கடலில் தமிழ் மக்களை கொல்லுகின்ற படலங்கை இலங்கை கடற்படைகள் எந்த தயக்கமும் தடையுமின்றி மேற்கொண்டன.

கிளாலிக் கடலே ஈழ மக்களின் சடலங்களால் நிறைந்ததது. இவைகள் எவற்றுக்கும் தண்டனையும் இல்லை. நீதியும் இல்லை. இறுதியில் மிகக் கோரமாக லட்சம் மக்கள் நந்திக்கடலிலும் முள்ளிவாய்க்காலிலும் கொன்று வீசப்பட்டனர்.

அதற்கும் நீதியில்லை. நாம் வாழ்ந்த நிலமும் நாம் நீந்தும் கடலும் சவக்குழியானது எமக்கு. குமுதினிப்படுகொலை போன்ற இரக்கமற்ற கொடுஞ்செயல்கள் முதல், நந்திக்கடல் கொலைகள் வரை நீதியான சர்வதேச விசாரணை ஒன்று தேவை என்பமே எம் மக்களின் நிலை.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 16 May, 2026 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016