மானிப்பாயில் சர்ச்சையை கிளப்பிய பேருந்து நிலைய இடிப்பு விவகாரம்
வலிகாமம் தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேச சபையில் நேற்று இடம்பெற்ற மாதாந்த அமர்வில் இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர் தயாபரன் மீது பகிரங்க குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
பேருந்து தரிப்பு நிலையத்தை இடிக்க கையூட்டு பெற்றதாக அவர் மீது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உறுப்பினர் நா.பகீரதனால் மேற்படி குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தெரிய வருகையில், வலிகாமம் தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றையதினம் தவிசாளர் ஜெசீதன் தலைமையில் நடைபெற்றது.
எருக்கலம் பிட்டி மயானம்
இதன்போது எருக்கலம் பிட்டி மயானம் புனரமைப்பு தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இது குறித்து ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உறுப்பினர் நா.பகீரதன் கருத்து தெரிவிக்கையில்,

எருக்கலம்பிட்டி இந்து மயானத்தில் உள்ள மண்டபமானது புலம்பெயர் தேசத்தில் வசிக்கின்ற தனிநபரால் கட்டி தரப்பட்டது. அதனை கட்டி தந்தவர் அதனை மீளவும் புனரமைப்பதற்கு தற்போது தீர்மானித்துள்ளார்.
எனவே அந்த நபரிடம் நிதியை பெற்று, பிரதேச சபையே அந்த வேவைத்திட்டத்தை செய்யலாம் என கூறினார்.
இதன்போது குறுக்கிட்ட இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர் தயாபரன், அவ்வாறு வழங்க முடியாது என்று கூறி முரணபாட்டில் ஈடுபட, குறுக்கிட்டு உறுப்பினர் பகீரதன் "நீங்கள் பேருந்து தரிப்பு நிலையத்தை இடிக்க கையூட்டு பெற்றீர்கள்" என்றார். இதன்போது அங்கு கடுமையான கருத்து மோதல் ஏற்பட்டு சபையில் அமைதியின்மை நிலவியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |