உக்ரைனில் ரஷ்ய படையினரின் மன உறுதி சிதைவு- காரணத்தை கண்டு பிடித்த பிரிட்டன் உளவுத்துறை
ரஷ்ய படையினரின் மன உறுதி சிதைவு
உக்ரைனில் போரிட்டு வரும் ரஷ்ய படைகள் மன உறுதி மற்றும் ஒழுக்கப் பிரச்சினைகளில் சிக்கி வருவதாகவும், இதற்கு அவர்களது ஊதியப் பிரச்சினைகளே முக்கிய காரணமாக இருக்கலாம் எனவும் பிரித்தானியாவின் பாதுகாப்பு உளவுத்துறை தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீதான போர் நடவடிக்கையை ரஷ்யா ஏழு மாதங்களாக தொடர்ந்து நடத்தி வருகிறது, இதில் சுமார் 70,000 வீரர்களை ரஷ்யா இழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில் சமீபத்தில் வெளியாகியுள்ள பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகத்தின் உளவுத்துறை அறிக்கையில்,
Latest Defence Intelligence update on the situation in Ukraine - 4 September 2022
— Ministry of Defence ?? (@DefenceHQ) September 4, 2022
Find out more about the UK government's response: https://t.co/d8BWWLuqCF
?? #StandWithUkraine ?? pic.twitter.com/N07M1HoaK5
பிரித்தானிய உளவுத்துறை அறிக்கை
ரஷ்ய துருப்புகளுக்கான வருமானம் குறிப்பிட்ட சுமாரான சம்பளத்தை அடிப்படையாக கொண்டது, இவை பல்வேறு போனஸ்கள் மற்றும் கொடுப்பனவுகளால் அதிகரிக்கப்படுகிறது.
இவ்வாறு வழங்கப்படும் ரஷ்ய படைகளின் ஊதியத்தில் தற்போது கணிசமான போர் போனஸ்கள் வழங்கப்படாமல் இருப்பதால், பெரும்பாலான ரஷ்ய படைகள் மனச்சோர்வு அடைந்து வருவதாக பிரித்தானிய உளவுத்துறை அறிக்கைகள் தெரிவித்துள்ளன.
அத்துடன் உக்ரைனில் நிலைநிறுத்தப்பட்டுள்ள துருப்புகளுக்கு பொருத்தமான சீருடை, ஆயுதங்கள், நிவாரணங்கள் மற்றும் ஊதியம் போன்ற அடிப்படை உரிமைகள் கூட வழங்க தவறி வருவதாக தெரிவித்துள்ளது.

