உயர்தர மாணவர்களுக்கு வெளியான விசேட அறிவிப்பு
2025 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சைகள் நடைபெறும் உத்தியோகபூர்வ திகதியை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சுபாஷினி இந்தியா குமாரி லியனகே அறிவித்துள்ளார்.
அதன்படி உயர்தர பரீட்சைகள் நவம்பர் 11 ஆம் திகதி முதல் டிசம்பர் 05 ஆம் திகதி வரை நடைபெறும் என ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை நடைபெறும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பரீட்சைக்கான விண்ணப்பங்கள்
இரண்டு பரீட்சைகளுக்கான விரிவான கால அட்டவணைகள் மற்றும் நுழைவு அட்டைகள் அந்தந்த திகதிக்குள் வழங்கப்படும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 2025 ஆம் ஆண்டு க.பொ.த. (உயர்தர) பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதி திகதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு (Ministry of Education) அறிவித்துள்ளது.
இதன்படி, ஓகஸ்ட் 12 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.
மேலும், இந்த சலுகை காலம் எந்தவொரு காரணத்தைக் கொண்டும் மேலும் நீட்டிக்கப்படாது என்று கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் திருவிழா


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 2 நாட்கள் முன்
