இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும் புதிய வரி..!
Ranjith Siyambalapitiya
Sri Lanka
Government Of Sri Lanka
By Dharu
வைன், பியர் உள்ளிட்ட அனைத்து வகையான மதுபானங்களுக்கும் இன்று நள்ளிரவு முதல் கலால் வரி 20% அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஜனவரி 1, 2023 முதல் அதிகரிக்கப்பட்டதோடு, மீண்டும் சிகரெட் மீதான வரியும் 20% அதிகரிக்கும் என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
குறித்த அறிவிப்பை அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
65-75 வீதம் வரி

இலங்கையின் மதுபான விலையில் சுமார் 75 வீதம் வரி விதிக்கப்படுவதாகவும், சிகரெட்டுகளுக்கு 65-75 வீதம் வரி விதிக்கப்படுவதாகவும் அவர் முன்னர் கூறியிருந்தார்.
மூன்ஷைன் உற்பத்தியை ஊக்குவிக்கும் முகமாக சட்டப்பூர்வ மதுபானம் மீது இலங்கையில் அதிக அளவு வரிகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த வரி சதவீதங்களுடன் ஒப்பிடும் போது மதுபானம் மற்றும் சிகரெட் விலை அதிகரிப்பு தொடர்பான மேலதிக அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி