அதிகாரப்பகிர்வு - மகிந்தவின் நிலைப்பாடு வெளியானது
Mahinda Rajapaksa
Ranil Wickremesinghe
Sri Lanka
By Sumithiran
அதிகாரப்பகிர்வை வழங்குவது குறித்து பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடு தொடர்பாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார்.
இதன்படி ஒற்றையாட்சிக்குள் உச்சபட்சமாக அதிகாரத்தைப் பகிர்வது என்பது பொதுஜன பெரமுனவின் கொள்கைகளுடன் அவ்வளவாக முரண்படவில்லை என, அவர் தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் கொள்கை
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரை ஆரம்பித்து அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்று கொள்கை பிரகடன உரையாற்றிய போது, ஒற்றையாட்சிக்குள் உச்சபட்சமாக அதிகாரத்தைப் பகிர்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக கூறினார்.
இந்த விடயம் குறித்து ஊடகவியலாளர்கள் மஹிந்தவிடம் கேள்வி எழுப்பிய போது, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.