சர்ச்சையில் சிக்கிய டயானா கமகே - காவல்துறையின் உதவியை நாடினார் (காணொளி)
தொலைபேசியில் ஒரு நபரை மோசமாக பேசிய குரல் ஒலிப்பதிவை அகற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே காவல்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இணைய குற்ற விசாரணைப் பிரிவின் பணிப்பாளருக்கு அனுப்பிய கடிதத்தில், சமூக ஊடகங்களில் பரவி வரும் குறித்த பதிவை அகற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு இராஜாங்க அமைச்சரின் ஊடகச் செயலாளர் காவல்துறையிடம் கோரியுள்ளார்.
நிதானம் இழந்த டயானா கமகே

ஷான் கனேகொட என்ற நபர் புதன்கிழமை(5) இராஜாங்க அமைச்சருக்கு தொலைபேசியில் பலமுறை தொந்தரவு செய்ததாக அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சரின் பாதுகாப்பு உத்தியோகத்தர், குறித்த நபரை அழைத்து இது தொடர்பாக விசாரிக்க, இரு தரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த உரையாடலின் போது, இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நிதானம் இழந்து அந்த நபரை மோசமான வார்த்தையில் திட்டியதாக கூறப்படுகிறது.
இராஜாங்க அமைச்சருக்கு அவப்பெயர்
சமூக ஊடகங்களில் பரவிவரும் ஒலிப்பதிவு தற்போது இராஜாங்க அமைச்சருக்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருவதால், அதனை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு அவரது அலுவலகம் காவல்துறையினரை கேட்டுக்கொண்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 3 மணி நேரம் முன்