மேலும் இரு மயக்க மருந்துகளின் பயன்பாடு இடைநிறுத்தம்!
இலங்கையில் மேலும் இரண்டு மயக்க மருந்துகளின் பயன்பாடு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் இன்று(21) இடம்பெற்ற நிகழ்வொன்றைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த குணவர்தன, தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம், வழங்கிய அறிக்கையின் அடிப்படையில் குறித்த மருந்துகள் திரும்பப் பெறப்பட்டதாக விளக்கமளித்தார்.
எவ்வாறாயினும், இரண்டு மயக்க மருந்துகளுக்கும் மாற்று மருந்துகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
இறக்குமதி குற்றச்சாட்டுகள்

அத்துடன், அனைத்து மருத்துவமனைகளுக்கும் இந்த மாற்று மருந்துகளை விநியோகிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்வது தொடர்பாக அண்மைக்காலமாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எனினும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும், அத்தகைய இறக்குமதிகள் அங்கீகரிக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.