வட மாகாணத்தில் சவாலான நிலையில் வைத்தியசாலைகள்

Hospitals in Sri Lanka
By Kathirpriya Aug 19, 2023 09:25 AM GMT
Report

வட மாகாணத்தில் ஒருவருடத்தில் 50 வைத்தியர்களும் 20 தாதியர்களும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக வட மாகாண சுகாதார பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

வவுனியா வைத்தியசாலையில் இன்று (19) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

வட மாகாணத்தில் ஒரு வருட காலப்பகுதியில் 50 இற்கும் அதிகமான வைத்தியர்களும் 20 தாதியர்களும் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர்.

வைத்தியர்களும் தாதியர்களும்

வட மாகாணத்தில் சவாலான நிலையில் வைத்தியசாலைகள் | Doctors And Nurse Leaving From Country Hospitals

இவர்களில் வெளிநாட்டுக்கு உயர் கல்விக்காக சென்று நாடு திரும்பாதவர்களும் அடங்குகின்றனர்.

வைத்தியர்களும் தாதியர்களும் வெளியேறுவது எமக்க ஒரு சவாலான விடயம்.

அதுமாத்திரமல்லாமல் அண்மைக்காலங்களில் கோவிட் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஆரம்பிக்கப்பட வேண்டிய தாதிய பயிற்சிகள் இன்னமும் ஆரம்பிக்கப்படாமல் உள்ளது.

இந்த வருடம் (2023) தாதிய கல்லூரியில் படித்து வெளியேறுபவர்கள் இருந்தாலும் எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு தாதிய பயிற்சிகள் இடம்பெறாத நிலை உருவாகியுள்ளது.

 தாதியாருக்கு நல்ல வரவேற்பு

வட மாகாணத்தில் சவாலான நிலையில் வைத்தியசாலைகள் | Doctors And Nurse Leaving From Country Hospitals

அத்துடன் வெளிநாடுகளில் தாதியாருக்கு நல்ல வரவேற்பு இருப்பதனால் அவர்கள் வேலையை முடிவுறுத்தி வெளியேறக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

எனவே எதிர்வரும் காலம் சவாலை எதிர்கொள்ளும் காலமாக அமையும்.

அத்துடன் நாடு முழுவதும் மருந்துத் தட்டப்பாடு ஏற்பட்டு வருகின்றது.

இருந்தபோதிலும் 90 வீதத்திற்கும் அதிகமான மருந்துகள் அந்தந்த வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

வவுனியா வைத்தியசாலையில் இரத்த சுத்திகரிப்பு ஒரு நாளைக்கு 40 பேருக்கு செய்யப்படுகின்றது.

மருந்து தட்டுப்பாடு

வட மாகாணத்தில் சவாலான நிலையில் வைத்தியசாலைகள் | Doctors And Nurse Leaving From Country Hospitals

இதனை செய்வதற்கான திரவத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டாலும் தற்போது அது தேவையான அளவு உள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் மருந்து தட்டுப்பாடு வட மாகாணத்தில் அனைத்து வைத்தியசாலையிலும் ஏற்பட்டிருந்தது.

இதனால் பொது மக்கள் அசௌகரியத்தினை சந்தித்திருந்தனர்.

தற்போது நிலைமை ஓரளவுக்கு சுமூகமாகி வருகின்றது. இதற்கு வைத்தியசாலை பணிப்பாளர்கள் மற்றும் நிர்வாகத்தினர் நன்கொடையாளர்களிடம் மருந்துகளை பெற்று சிகிச்சையை வழங்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும் .

ReeCha
அகாலமரணம்

மன்னார், நீஸ், France

21 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021