தாய்வானை பகடைக்காயாக்க நினைத்த அமெரிக்கா - இந்தியா உள்ளிட்ட அனைத்திற்கும் முட்டுக்கட்டைப்போட்ட சீனா

United States of America China India Dollars
By Dharu Dec 14, 2022 09:38 AM GMT
Report

சீனா செமிகண்டக்டர் உற்பத்தியினை ஊக்குவிக்கும் விதமாக, 1 ரில்லியன் யுவானை (143 பில்லியன் டொலரை) ஒதுக்கீடு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவினை ஒரு புறம் கொரோனா தாக்கம் வந்தாலும், மறுபுறம் தனது உற்பத்தியினை யாருக்காகவும் விட்டுவிட முடியாது என்பது போல ஒவ்வொரு நடவடிக்கையாக தொடங்கியுள்ளது.

உலகின் உற்பத்தி ஆலையாக இருக்கும் சீனா, தன் இடத்தை தக்க வைத்து கொள்ள, அடுத்தடுத்த நடவடிக்கைகளை எடுக்க தயாராகி விட்டது. அதில் ஒன்று தான் சீனாவின் 1 ட்ரில்லியன் யுவான் அறிவிப்பு

சீனா - தாய்வான்

தாய்வானை பகடைக்காயாக்க நினைத்த அமெரிக்கா - இந்தியா உள்ளிட்ட அனைத்திற்கும் முட்டுக்கட்டைப்போட்ட சீனா | Dollar 143 Billion China Plans Package Firms Usa

சீனாவின் இந்த நடவடிக்கையானது சீனா - தாய்வான் இடையேயான பதற்றமான நிலைக்கு மத்தியில், தாய்வானை சார்ந்திருப்பதை குறைக்கும் விதமாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு மற்றொரு காரணம் அமெரிக்கா எனலாம். இது அமெரிக்காவினை எதிர்கொள்ள சீனா எடுக்கும் முக்கிய முடிவாகவும் பார்க்கப்படுகிறது.

சீனா தாய்வான் இடையேயான பிரச்சனைக்கு மத்தியில், அமெரிக்கா தாய்வானுக்கு ஆதரவு அளித்து வருகின்றது. இதற்கிடையில் சீனா செமிகண்டக்டர் உற்பத்தியில் பெரியளவில் தாய்வானையே சார்ந்துள்ளது. இதனால் சீனாவுக்கு எதிராக தாய்வானை பகடைக்காயாக அமெரிக்கா பயன்படுத்தலாம் என்ற அச்சமும் சீனா மத்தியில் இருந்து வருகின்றது.

அமெரிக்காவின் பார்வை

தாய்வானை பகடைக்காயாக்க நினைத்த அமெரிக்கா - இந்தியா உள்ளிட்ட அனைத்திற்கும் முட்டுக்கட்டைப்போட்ட சீனா | Dollar 143 Billion China Plans Package Firms Usa

அதோடு சீனாவின் தொழில்நுட்பத்தை அமெரிக்கா முடக்கும் விதமாக ஒவ்வொரு முட்டுக்கட்டையாக போட்டு வரும் நிலையில், அமெரிக்காவின் பார்வை தற்போது செமிகண்டக்டர் பக்கம் திரும்பியுள்ளது.

இதற்கிடையில் தான் சீனா இப்படியொரு மாபெரும் நிதியினை செமிகண்டக்டர் ஊக்குவிப்புக்காக ஒதுக்கீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்த நிதியானது அடுத்த 5 ஆண்டுகளில் செய்யப்படலாம் என்றும், இது தவிர வரி சலுகை என பல சலுகைகளை உற்பத்தியாளார்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏற்றுமதி வர்த்தகம்

தாய்வானை பகடைக்காயாக்க நினைத்த அமெரிக்கா - இந்தியா உள்ளிட்ட அனைத்திற்கும் முட்டுக்கட்டைப்போட்ட சீனா | Dollar 143 Billion China Plans Package Firms Usa

நிலவி வரும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் உற்ப்பத்தி தேவையானது அதிகரித்து வரும் நிலையில், ஏற்றுமதி வர்த்தகத்தில் தாக்கம் செலுத்தி வருகின்றது.

இதனால் சர்வதேச நாடுகள் பலவும் சிக்கலை எதிர்கொண்டுள்ளன. ஏற்கனவே வாகன உற்பத்தியில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக எதிர்காலத்தில் அரசு நேரடியாக இந்த துறையில் கவனம் செலுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

செமிகண்டக்டர் சிப் தயாரிப்பு

தாய்வானை பகடைக்காயாக்க நினைத்த அமெரிக்கா - இந்தியா உள்ளிட்ட அனைத்திற்கும் முட்டுக்கட்டைப்போட்ட சீனா | Dollar 143 Billion China Plans Package Firms Usa

ஏற்கனவே சீனாவின் உற்பத்தியினை கருத்தில் கொண்டு தங்களது உற்பத்தியினை அதிகரிக்க இந்தியா உள்ளிட்ட நாடுகளும் கட்டமைப்புகளை தொடங்கி விட்டன.

இதற்கிடையில் தான் சீனா அவசரமாக இப்படி ஒரு திட்டத்தினை கையில் எடுத்திருக்கலாம் என தெரிகிறது. அமெரிக்காவின் வர்த்தக துறையானது கடந்த ஒக்டோபர் மாதமே ஒரு விரிவான அறிவிப்பினை வெளியிட்டது.

அதில் அமெரிக்கா அரசு சீனாவில் இருக்கும் செமிகண்டக்டர் சிப் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு எவ்விதமான உபகரணங்களும் அளிப்பதிலும், ஏற்றுமதி செய்வதிலும் கட்டுப்பாடுகளையும், தடைகளையும் விதிக்க முடிவு செய்தது.இதன் காரணமாக சர்வதேச அளவில் பெரியளவில் பற்றாக்குறை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஜோ பைடன்

தாய்வானை பகடைக்காயாக்க நினைத்த அமெரிக்கா - இந்தியா உள்ளிட்ட அனைத்திற்கும் முட்டுக்கட்டைப்போட்ட சீனா | Dollar 143 Billion China Plans Package Firms Usa

இதற்கிடையில் கடந்த ஒகஸ்ட் மாதம் செமிகண்டக்டர் உற்பத்தியினை அதிகரிக்க, 53 பில்லியன் டொலர் மானியத்தினை அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் அறிவித்தார்.

இதில் 24 பில்லியன் டொலர் வரி சலுகையும் அடங்கும். இதேபோல இந்தியாவும் தனது பி எல் ஐ திட்டத்தின் மூலம் செமிகண்டக்டர் உற்பத்திக்கு வரி சலுகைகளை வாரி வழங்கியுள்ளது.

இப்படி பல காரணங்களுக்கு மத்தியில் தான் சீனா தற்போது ஒரு திட்டத்தினை உருவாக்கியுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Rorschach, Switzerland

06 Nov, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, காரைநகர்

07 Nov, 2025
மரண அறிவித்தல்

புத்தளம், Frankfurt, Germany

06 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025