வெளிநாட்டிலிருக்கும் ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் வைப்பிலிட்டுள்ள நன்கொடை!

Sri Lanka Sri Lankan Peoples Department of Meteorology
By Shalini Balachandran Dec 03, 2025 11:16 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பெரும் சேதத்திற்குப் பிறகு நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்ட Rebuilding Sri Lanka நிதியத்திற்கு 19,000 இற்கும் மேற்பட்ட வெளிநாட்டில் தொழில்புரியும் இலங்கையர்கள் பணத்தை வைப்புச் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநதி ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

வட்டியில்லா மாணவர் கடன் திட்டம் : விண்ணப்ப காலம் நீடிப்பு

வட்டியில்லா மாணவர் கடன் திட்டம் : விண்ணப்ப காலம் நீடிப்பு

சீரற்ற வானிலை

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “நமது நாட்டு மக்களில் பெரும்பாலோர் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்க அரசாங்கம் தலையிடுவது போன்று வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க சந்தர்ப்பம் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

வெளிநாட்டிலிருக்கும் ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் வைப்பிலிட்டுள்ள நன்கொடை! | Donations Deposited Sri Lankan Banks From Abroad

அதற்காக நிதி அமைச்சு மற்றும் ஏனைய அரச நிறுவனங்களினதும் ஒருங்கிணைப்பில் தற்போது இரண்டு வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

அதன் முதலாவது வேலைத்திட்டமாக வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களிடமிருந்து பெறப்படும் நிதி உதவிக்காக இலங்கை வங்கியில் ஒரு சிறப்புக் கணக்கு இலக்கம் அறிவிக்கப்பட்டது.

மீண்டும் கொட்டப்போகும் மழை : யாழ் பல்கலை பேராசிரியரின் கணிப்பு

மீண்டும் கொட்டப்போகும் மழை : யாழ் பல்கலை பேராசிரியரின் கணிப்பு

இலங்கையர்கள் 

இதுவரை 19,000 இற்கும் மேற்பட்ட வெளிநாட்டில் தொழில்புரியும் இலங்கையர்கள் அதில் பணத்தை வைப்புச் செய்துள்ளனர்.

மேலும், இரண்டாவது வேலைத்திட்டத்தின் கீழ் இந்நாட்டிற்கு பொருட்களை அனுப்புபவர்களுக்கு குறைந்த ஆவணங்கள் மற்றும் எந்த கட்டணமும் இன்றி பொருட்களை அனுப்பும் செயல்முறை இலகுபடுத்தப்பட்டுள்ளது.

வெளிநாட்டிலிருக்கும் ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் வைப்பிலிட்டுள்ள நன்கொடை! | Donations Deposited Sri Lankan Banks From Abroad

மேலும், அத்தகைய பொருட்களுக்கு விதிக்கப்படும் தீர்வை வரி மற்றும் கட்டணங்கள் நீக்கப்பட்டுள்ளன.

இந்த வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துவதற்காக சுங்க பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் ஒரு செயலணி நிறுவப்பட்டுள்ளது.

வெளிநாட்டிலுள்ள ஊழல் சொத்துகள் மீட்பு: சர்வதேச நிபுணர்கள் ஒத்துழைப்பு

வெளிநாட்டிலுள்ள ஊழல் சொத்துகள் மீட்பு: சர்வதேச நிபுணர்கள் ஒத்துழைப்பு

தூதரகங்கள் 

எனவே, இந்நாட்டிற்கு அனுப்பப்படும் பொருட்களை எளிதாக விடுவிக்க முடியும் என்பதைக் கூற வேண்டும் இருப்பினும் இந்த சலுகை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பெயரில் அனுப்பப்படும் பொருட்களுக்கு மாத்திரமே கிடைக்கும்.

இது தொடர்பான மேலதிக தகவல்கள் ஏற்கனவே சுங்க இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன, மேலும், அனைத்து நாடுகளிலும் உள்ள தூதரகங்கள் மூலம் இது குறித்து தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.

வெளிநாட்டிலிருக்கும் ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் வைப்பிலிட்டுள்ள நன்கொடை! | Donations Deposited Sri Lankan Banks From Abroad

வெளிநாட்டில் தொழில்புரியும் இலங்கையர்களால் இந்நாட்டிற்கு அனுப்பப்படும் பொருட்கள் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் பெறப்பட்ட பின்னர் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்கள் மூலம் உடனடியாக விநியோகிக்கும் வேலைத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் வங்கிகள் மூலம் பணம் அனுப்புவதில் சிரமம் இருந்தால் அவர்கள் சம்பந்தப்பட்ட நாட்டின் தூதரகங்கள் மூலமாகவும் நாட்டிற்கு பணத்தை அனுப்பலாம்.

வெளிநாட்டில் தொழில்புரியும் இலங்கையர்களாகிய உங்களால் அனுப்பும் பணம் மற்றும் பொருட்கள் உங்கள் சகோதரர் அல்லது அண்டை வீட்டாருக்கு வழங்கப்படலாம் எனவே பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க அனைவரின் ஆதரவும் அவசியம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டித்வா புயல் பேரழிவு : இலங்கை -தமிழ்நாட்டை ஒப்பிடும் முன்னாள் அமைச்சர்

டித்வா புயல் பேரழிவு : இலங்கை -தமிழ்நாட்டை ஒப்பிடும் முன்னாள் அமைச்சர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025