ஆசிரியர்களுக்கான ஆடைகட்டுப்பாடு -வெளியானது அறிவிப்பு
அரசு அலுவலகங்களில் எளிதான மற்றும் கண்ணியமான உடையில் பணிக்கு வரலாம் என வெளியிடப்பட்டுள்ள ஆடைக் கட்டுப்பாடு சுற்றறிக்கை பாடசாலை ஆசிரியர்களுக்கு பொருந்தாது என பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த சுற்றறிக்கை குறித்து பல தரப்பினர் பகிர்ந்துள்ள கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையில், அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே இதனைத் தெரிவித்தார்.
ஆடை கட்டுப்பாடு
மேலும் பாடசாலை ஆசிரியர்கள், ஆடைகளை அணிவது குறித்து கல்வி அமைச்சு தனது முடிவை அறிவிக்க வேண்டும். ஆடை கட்டுப்பாடு தொடர்பான இந்த சுற்றறிக்கை அலுவலக ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும் என தெளிவாக கூறப்பட்டுள்ளது.
எனினும், அரச நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நாட்டின் பல பாகங்களில் உள்ள ஆசிரியைகள் நேற்றையதினம் புடவைக்கு பதிலாக மாற்று உடைகளை அணிந்து வந்திருந்தமை சமுக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
