வயிற்றில் மறைத்து வைத்து ஐஸ் போதைப்பொருளைக் கொண்டு சென்ற ஓட்டுநருக்கு நேர்ந்த கதி
தனது வயிற்றில் ஐஸ் போதைப்பொருளை மறைத்து கொண்டு சென்ற சொகுசு பேருந்து ஓட்டுநர் ஒருவர், அந்த போதைப்பொருள் பொட்டலம் ஒன்று வெடித்ததில் விஷம் கலந்ததால் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் தங்காலை-மக்கும்புரா வழித்தடத்தில் இயங்கும் ஒரு சொகுசுப் பேருந்தில் பணிபுரிந்த, ஒக்கவெலவைச் சேர்ந்த 55 வயது ஓட்டுநர் ஆவார்.
தங்காலை ஆதார மருத்துவமனையில் அனுமதி
மக்கும்புரவிலிருந்து தங்காலை நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து, 8ஆம் திகதி அதன் இலக்கை அடைந்த சில நிமிடங்களில், ஓட்டுநர் திடீரென கடுமையாக நோய்வாய்ப்பட்டார்.

சிகிச்சைக்காக அவர் உடனடியாக தங்காலை ஆதாரமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அங்கு அவர் உயிரிழந்தார்.
பிரேத பரிசோதனையில் வௌியான தகவல்
நேற்று (9) தங்காலை மருத்துவமனையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், இறந்தவரின் வயிற்றில் போதைப்பொருள் அடங்கிய இரண்டு பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டது தெரியவந்தது.

உடலுக்குள் இரத்தத்துடன் போதைப்பொருட்கள் கலந்ததால் ஏற்பட்ட விஷமே மரணத்திற்குக் காரணம் என பிரேத பரிசோதனைகள் உறுதிப்படுத்தியுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மண்டைதீவு படுகொலை … கடலால் சூழப்பட்ட ஒரு தீவின் இரத்த நினைவுகள்... 1 மணி நேரம் முன்