ஒரு கோடி அறுபதுலட்சம் பெறுமதியுள்ள போதைப்பொருளுடன் தம்பதியினர் கைது!
ஒரு கோடி அறுபதுலட்சம் பெறுமதியுள்ள போதைப்பொருள் வைத்திருந்த அத்திடிய பிரதேசத்தை சேர்ந்த தம்பதியினர் நேற்று கல்கிசை குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த தம்பதியினர் நேற்று வீட்டிற்குள் போதைப்பொருள் பொதி செய்து கொண்டிருந்த போது காவல்துறையின் திடீர் சுற்றிவளைப்பில் சிக்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
குறித்த சந்தேகநபர்கள் 35 மற்றும் 37 வயதுடைய தம்பதியினர் எனவும், அவர்கள் வீட்டில் ஹெரோயின் பொதி செய்து விநியோகத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் காவல்துறையினரின் முதல் கட்டவிசாரணையில் தெரியவந்துள்ளது.
கடத்தல் மூலம் சம்பாதித்த பணம்
மேலும் அவர்களின் வீட்டில் இருந்து போதைப்பொருள் பொதியிடுவதற்கு பயன்படுத்தப்பட்ட பல சாதனங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படும் பணத்திலிருந்து 41,000 ரூபா என்பனவும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.