தெற்கில் மீட்கப்பட்ட ஐந்து கோடி ரூபாவுக்கும் அதிகமான போதைப்பொருள்!
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Law and Order
By Kanooshiya
காலி சீனிகம பகுதியில் இன்று (08.11.2025) சுமார் 50 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, மூன்று கிலோவுக்கும் அதிகமான ஹெராயினுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை விசேட அதிரடிப்படையின் தெற்கு மாகாண விசேட அதிரடிப்படை பிரிவின் அதிகாரிகள் குழு இந்த ஹெராயினுடன் சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.
காவல்துறை விசேட அதிரடிப்படையின் தலைமை கட்டளை அதிகாரியின் அறிவுறுத்தலின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்